வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 5 மே, 2009

திறக்காத வேர்டும் திறக்கும்.






எம்.எஸ் வேர்டில் உருவாக்கிய தமிழ்க் கோப்பு (வேர்டு)ஒன்று திறக்காமல் பிழைச்செய்தி தோன்றியது.அக்கோப்பு முக்கியமான தவிர்க்கமுடியாத கோப்பு.என்ன செய்வது என சிந்தித்துக் கொண்டே

இணையத்தில் Word Repair என்று கூகிளில் தேடினேன். பல்வேறு இணையதள முகவரிகள் கிடைத்தன. அவற்றுள் இலவசமான இணையதளத்தைத் தேடியபோது எனக்கு http://www.repairmyword.com/?file=WordRepair.exe என்னும் இணையதளம் கிடைத்தது.




இவ்விணையதளம் சென்று வேர்டு கோப்பினை மீட்டுத்தரும் மென்பொருளை பதிவிறக்கினேன்.
என் கணினியில் நிறுவிக்கொண்டேன்.


பின் அம்மென்பொருளைத் திறந்து நான் மீட்க வேண்டிய கோப்பினைக் கணினியிலிருந்து அளித்தேன் பின் அம்மென்பொருளில் இடது மூலையில் உள்ள ஓபன் என்னும் பகுதியைச் சொடுக்கினேன்.
எனது கோப்பு திறக்கப்பட்டது.மிகவும் மகிழ்ந்தேன்..

நீங்களும் இது போன்ற சூழல்களில் இம்மென்பொருளைப் பயன்படுத்திப்பாருங்களேன்...

7 கருத்துகள்:

  1. பெயரில்லா6 மே, 2009 அன்று AM 9:16

    aha thamil menporul nunporul nutpamkooda payitruvikiradhey......eppadi erunthalum payanulla thagavalgaley thaangal pagirvadhu ellam...thodarattum ungalpani sevvaney...

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள நல்ல தகவல்...

    பகிர்தலுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. அட தமிழ் ஆசிரியராய் இருந்துகொண்டு கணினியையும் பிரித்து மேய்கீறிர்களே!!

    அடியேனை ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  4. என்ன நண்பரே தங்களை மறக்கமுடியுமா?
    எங்கள் கல்லூரியில் நடந்த இணையம் குறித்த பயிலரங்கில் தாங்கள் கடவுச்சொல்பற்றிப் பேசியது இன்னும் நினைவை விட்டு நீங்கவில்லையே....

    பதிலளிநீக்கு