வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 24 மார்ச், 2011

தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி

கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.6.2011
வந்து சேரவேண்டிய முகவரி :தலைவர் தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-9
*போட்டிக்கான நெறிமுறைகள்:
1. 5 பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை மட்டும்
அனுப்புக.
2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின்
பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ
முத்திரையோ இருக்கக் கூடாது.
3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின்
பெயரையும் இணைத்து அனுப்புக.
4.கதையின் இரு படிகளைக் கட்டாயம் அனுப்புக.
5.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச் சொற்களையோ பெயர்
களையோ கலக்காமல் தனித்தமிழில் கதைகள் அமைதல் வேண்டும்.
6.கதைக்கேற்ற ஓவியங்களை அனுப்பலாம்.
7.ஒருவர் பல கதைகளை அனுப்பலாம்.
8.கதைகளை நூலாக்கும் உரிமை,பதிப்பிக்கும் உரிமை
ஆகியவற்றுக்குத் தனித்தாளில் ஒப்புதல் தருக.
9.இப்போட்டி 12 ஆவது ஆண்டாக நடைபெறுகிறது.கதைகள்
வெல்லும்தூயதமிழ் மாதஇதழில் தொகுப்பாக வெளியிடப்படும்.
தனித்தொகுப்பாகவும் வெளியிட முயல்வோம். அதன் முழு உரிமை
இயக்கத் தலைவர்க்கு உரியதாகும். முழுமையான நெறிமுறைகள்
1.7.2011 வெல்லும் தூயதமிழில் முடிவுகள் வெளிவரும்.
. முதற்பரிசு உருவா 1000.00
இரண்டாம் பரிசு உருவா 500.00
மூன்றாம் பரிசு உருவா 250.00
பரிசுகளை வழங்குபவர் எழுத்தாளர் இரா.தேவதாசு, புதுச்சேரி.
-முனைவர் க.தமிழமல்லன், தலைவர்,தனித்தமிழ் இயக்கம்.
தொடர்பு எண்கள் : 0413-2247072, 97916 29979ல் வெளியிடவும்
முனைவர் க.தமிழமல்லன்

5 கருத்துகள்: