வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 3 ஜூலை, 2018

இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!


இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை!

மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள்,

செயற்கை நுண்ணறிவுத்திறன் (AI),

மெய்நிகர் தொழில்நுட்பம்(VR)

பொருள்களின் இணையம் (IOT),

போன்றவை எதிர்காலத்தில் இந்த வேலைக்கு மனிதர்கள் எதற்கு?

என்ற கேள்வியை முன்வைத்து வளர்ந்து வருகின்றன. இயற்கையை மறந்து செயற்கையை பெரிதும் சார்ந்து வாழும் இவ்வாழ்க்கை முறையே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை.




இன்றைய சூழலிலும் வள்ளுவரின் குறள் நமக்குத் தேவையாக இருக்கிறது..

         செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
        இயற்கை அறிந்து செயல். 637

செயற்கையை அறிந்தாலும் இயற்கையுடன் இயைந்து வாழ்!


தொடர்புடைய இடுகை

தமிழர் பண்பாட்டில் இயற்கை

5 கருத்துகள்: