வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 5 அக்டோபர், 2011

உங்கள் எழுத்துக்களில் நச்சுநிரல் உள்ளதா?


வேர்களைத்தேடி.........
நச்சுநிரல் சோதனை
நம் கணினிக்கு மட்டும் போதுமா??
நம் எழுத்துக்களுக்கு வேண்டாமா??

நம் எழுத்துக்களையும் ஆய்வு செய்வோம்..

மூங்கில்கள் எல்லாம்
மயக்கும் குழலாவதில்லை!

மழைத்துளிகள் எல்லாம்
அழகிய முத்தாவதில்லை!

தீக்குச்சிகள் எல்லாம்
தீபஒளி தருவதில்லை!

ஆயிரம் ஆயிரம் உண்டு இங்கு
அறிவாளிகள்! ஆனாலும்
அவர்களுக்கெல்லாம் வாய்க்கவில்லை
வலையுலகில் தமிழ் எழுதும் வாய்ப்பு!!

இவ்வரிய வாய்ப்பை
நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்?

நம் எழுத்துக்களை உற்று நோக்குங்கள்..

              நம் எழுத்துக்கள்...
புல்லாங்குழலா?
முத்தா?
தீப ஒளியா?

அந்தக் காலத்தில் நந்திவர்ம பல்லவன்
எழுத்துக்களில் நச்சுவைத்து
அறம்பாடிக் கொல்லப்பட்டானாம்..

நம் எழுத்துக்களில் நச்சுநிரல் கலந்துள்ளதா
என்று ஆய்வு செய்வோமா??

  நச்சு எழுத்துக்கள்...

எழுத்துப் பிழை, பிறமொழிக் கலப்பு, தவறான சிந்தனை, தவறான வழிகாட்டல், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள்....

போன்ற நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா?
அதனாலென்ன திருத்திக்கொள்வோம்..

            தமிழ் உறவுகளே..

நம் விரல்களுக்குத் தமிழ் மை ஊற்றுவோம்..
தட்டச்சுப்பலகைகள் வழியே
தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம்..


வேறொருவர் கண்டுபிடிப்புக்கெல்லாம்
நாம் தமிழில் பெயர் கண்டு
இயம்பியது போதும்..

இனிமேலாவது
தமிழனின் கண்டுபிடிப்புக்கு
இன்னொருவர் பெயர் வைக்கும்
நிலையை உருவாக்குவோம்..

நம் துறை சார்ந்த
சிந்தனைகளை
படைப்பாக்கத் திறனை
கண்டுபிடிப்புகளை
அனுபவங்களை
இயன்றவரை இனியதமிழில்
பதிவு செய்வோம்!


கலைச் சொல்லாக்கம்.

virus  - நச்சுநிரல்
Antivirus  - எதிர்ப்பு நச்சுநிரல்

55 கருத்துகள்:

  1. //நம் சிந்தனைகளை
    படைப்பாக்கத் திறனை
    கண்டுபிடிப்புகளை
    அனுபவங்களை
    இயன்றவரை இனியதமிழில்
    பதிவு செய்வோம்!//
    அப்படியே

    பதிலளிநீக்கு
  2. உணர்வூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உணர்வூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நம்மால் முடிந்தவரை இனிய தமிழில்
    பதிவு செய்ய முயற்சிப்போம்.
    நன்றி!நண்பரே!

    பதிலளிநீக்கு
  5. நம் தமிழில் அனைத்துக்கும் பெயர் உண்டு என்று நினைக்கிறேன்...-ஆனால் நாம் எல்லாத்துக்கும் பெயர்களை கண்டுபிடிக்க தயங்குகிறோம்... காரணம் காலம் போகும் வேகத்துக்கு பலரால் தேடமுயற்ச்சிப்பதில்லை...

    அணுவை பற்றிய சிந்தனையே இல்லாத காலத்தில் அணுவை நூறாக பிளந்து..,அந்த ஒரு பகுதிக்கு 'கோண்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்...ராமாயணத்தில் குறிப்பு உள்ளது...

    (எப்போதோ படித்த ஞாபகம்..தவறிருந்தால் குற்ப்பிடுங்கள்.)

    பதிலளிநீக்கு
  6. நல்ல முயற்ச்சி... நண்பரே..

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. //இனிமேலாவது

    தமிழனின் கண்டுபிடிப்புக்கு

    இன்னொருவர் பெயர் வைக்கும்

    நிலையை உருவாக்குவோம்..//

    நிச்சயமாக முயல்வோம்!!

    பதிலளிநீக்கு
  8. எழுத்துக்களில் நச்சு இல்லாமல் எழுத பழகுவோம்..

    பதிலளிநீக்கு
  9. //நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா?
    அதனாலென்ன திருத்திக்கொள்வோம்..//

    ஆம திருத்திக்கொள்வோம்.
    அருமையான பதிவு ஐயா.

    பதிலளிநீக்கு
  10. நம் துறை சார்ந்த
    சிந்தனைகளை
    படைப்பாக்கத் திறனை
    கண்டுபிடிப்புகளை
    அனுபவங்களை
    இயன்றவரை இனியதமிழில்
    பதிவு செய்வோம்!

    சிறப்பான ஆக்கம் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    பதிலளிநீக்கு
  11. தேர்ந்த தமிழ் வார்த்தைகள் அறிந்தேன். நான் அறிந்தவரை, என் எழுத்தில் நச்சுநிரல் இல்லையென்பதில் எனக்குப் பெருமிதமே. அவ்வாறு எனையறியாது கலந்திருப்பின் எதிர்ப்பு நச்சுநிரலை இனிதே வரவேற்கிறேன். காலத்திற்கேற்ற பதிவு. மீண்டும் தங்களுக்கு என் நன்றியும் வாழ்த்துக்களும் முனைவரே.

    பதிலளிநீக்கு
  12. // எழுத்துப் பிழை, பிறமொழிக் கலப்பு, தவறான சிந்தனை, தவறான வழிகாட்டல், தன்னம்பிக்கையற்ற வார்த்தைகள்....

    போன்ற நச்சு நிரல்கள் நம் எழுத்துக்களில் கலந்திருக்கிறதா?
    அதனாலென்ன திருத்திக்கொள்வோம்..//

    சரியான பகுப்பு ... மாற்றம் தரும் பகிர்வு

    பதிலளிநீக்கு
  13. நச்சு நிரல் என்று புது வார்த்தையா, சபாஷ் வாத்தியாரே... அதே போல் facebook என்பதற்கு இங்கு மூஞ்சி புத்தகம் என்று கூறுகிறார்கள் அதை இன்னும் அழகாக முகநூல் என்று கூறலாமே...

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு...

    "வேறொருவர் கண்டுபிடிப்புக்கெல்லாம்
    நாம் தமிழில் பெயர் கண்டு
    இயம்பியது போதும்..

    இனிமேலாவது
    தமிழனின் கண்டுபிடிப்புக்கு
    இன்னொருவர் பெயர் வைக்கும்
    நிலையை உருவாக்குவோம்.."

    கண்டிப்பாக முயல்வோம்...
    முயன்றால் முடியாதது ஏதுமில்லை...

    பதிலளிநீக்கு
  15. மாற்றம் தரும் பகிர்வு.

    நம் விரல்களுக்குத் தமிழ் மை ஊற்றுவோம்..தட்டச்சுப்பலகைகள் வழியே தமிழ் மொழிக்கு வளம் சேர்ப்போம்..

    பதிலளிநீக்கு
  16. பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை என்ற பதிவு போட்டுருக்கேன் வந்து பார்க்கவும்

    http://vairaisathish.blogspot.com/2011/10/blog-post_06.html

    6 அக்டோபர், 2011 2:44 pm

    பதிலளிநீக்கு
  17. நல்லது...புதிய வார்த்தைகள் அறிந்தோம் ! தமிழ் சிறக்கட்டும்!!!

    பதிலளிநீக்கு
  18. நல்ல பதிவு! தாய்மொழி குறித்த தன்னுணர்வு இருந்தால்தான் எழுத்துப்பிழை போன்ற நச்சு நிரல்களைத் தவிர்க்க முடியும்.

    பதிலளிநீக்கு
  19. தமிழின், தமிழனின் தன்மானம் காக்கத்துடிக்கும் இடுகை.நன்றி நண்பரே.உமது கனவு பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  20. கூடுமானவரையில் நச்சுக்களை படைப்புகளில்
    ஒட்டவிடாமல்தான் பார்த்துக் கொள்கிறேன்
    நல்ல வழிகாட்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி
    த.ம 14

    பதிலளிநீக்கு
  21. //மூங்கில்கள் எல்லாம்
    மயக்கும் குழலாவதில்லை!

    மழைத்துளிகள் எல்லாம்
    அழகிய முத்தாவதில்லை!

    தீக்குச்சிகள் எல்லாம்
    தீபஒளி தருவதில்லை!//

    உண்மைதான். நீங்கள் சொன்னபடி
    இயன்றவரை இனிய தமிழில்பதிவு
    செய்வோம்!

    பதிலளிநீக்கு
  22. பதிவை சொல்லியிருக்கும் விதமே அடுத்த வரிக்கு ஈர்க்கிறது.. உங்கள் கைப்படுவதாலே என்னவோ தமிழ் மேலும் அழகாய்...விரல்களுக்கு மை ஊற்றுவோம் குணா..

    பதிலளிநீக்கு
  23. இன்று என் தளத்தில் ஒரு பக்திப் பாடல் காத்திருக்கின்றது இதைக் காணத் தவறாதீர்கள் முனைவரே ............

    பதிலளிநீக்கு
  24. நம் எழுத்துக்கள்...
    புல்லாங்குழலா?
    முத்தா?
    தீப ஒளியா?

    தன்னைதானே அறிவது அறிவு
    தமிழறிந்து தனையும் உணர்வோம்.

    பதிலளிநீக்கு
  25. @Ramaniதங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள் இரமணி ஐயா.

    பதிலளிநீக்கு
  26. @தமிழரசிஅதெல்லாம் எதுவுமில்லை தமிழரசி..

    தமிழுக்கு நான் ஒரு கருவி அவ்வளவுதான்..

    பதிலளிநீக்கு