வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 31 டிசம்பர், 2008

பன்னாட்டுக் கருத்தரங்கம்

கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக நடக்கவிருக்கும் பன்னாட்டுக் கருத்தரங்கின் அழைப்பிதழ் கீழே உள்ளது.அதனை பெரிதாகக் காண அழைப்பிதழின் மீது சுட்டியைச் சொடுக்கவும்.இதனைப் படிஎடுத்துப் பயன்படுத்தலாம்..........









வியாழன், 25 டிசம்பர், 2008

பட்டமளிப்பு விழா

24.12.2008 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற்ற போது எடுத்த நிழற்படம்.சங்க இலக்கியத்தில் ஒலிக்கூறுகள் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்தமைக்காக இப்பட்டம் பெற்றேன்.........



திங்கள், 15 டிசம்பர், 2008

மனித நேயம் மலரட்டும்.....

சாதிப் பேய்கள் ஒழியட்டும்
சமத்துவம் எங்கும் மலரட்டும்
நீதி உலகில் நிலைக்கட்டும்
நிதியும் பொங்கிப் பெருகட்டும்
ஆதியில் வந்தது தமிழ்தானே
பாதியில் வந்தன ஓடட்டும்
மீதி உள்ள வாழ்நாளில்
மனித நேயம் மலரட்டும்....

வியாழன், 4 டிசம்பர், 2008

தமிழ்ச்சிந்தனைகள்

என் கேள்விக்கு என்ன பதில்

என்னும் தலைப்பில் தமிழாய்வின் இன்றைய நிலை குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு கருத்துரை வழங்கிய நெஞ்சங்களுக்கு நன்றி…….


தமிழாய்வு குறித்த சிந்தனையாக இக்கட்டுரை அமைகிறது..

(கருத்துரை
1.aadippaavai said..(http://aadippaavai.blogspot.com/)
ஆம் உண்மைதான்.................
November 7, 2008 5:22 AM

2. அதிரை ஜமால் said..(http://adiraijamal.blogspot.com/)
நீங்கள் சொல்லியிருப்பவை உண்மையே
ஆனாலும் தமிழ் ஆய்வுன்னா - என்னதாங்க ?
November 20, 2008 8:17 PM

3.முனைவர் சே.கல்பனா said.(http://kalpanase.blogspot.com/)
வணக்கம்
தமிழாய்வின் நிலை தாழ்ந்து கொண்டிருப்பது உண்மை தான்.ஆய்வை எவ்வாறு நாம் தரப்படுப்புவது கூறுங்களேன்.
நன்றி.
November 21, 2008 5:54 AM

4. சே.வேங்கடசுப்ரமணியன். said..(http://thogamalaiphc.blogspot.com/)
நல்ல கருத்துக்கள் வரவேற்கிறேன்.
November 22, 2008 9:05 AM)

தமிழ்ச் சிந்தனை

அறிவியலே இன்றைய மானிட வளர்ச்சிக்கு அடிப்படை.தமிழில் அறிவியல் குறித்த செய்திகள் நிறைய உள்ளன.ஆனால் அறிவியலில் தான் தமிழ் குறித்த செய்திகள் குறைவு.அதற்கு நாம் நம் தாய்மொழியைப் புறக்கணித்ததும் ஒரு காரணமாகும்.
தாய்மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை
தாய்மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை
என்பது சான்றோர் வாக்கு.

ஒவ்வொரு மனிதனும் தன் தாய்மொழி வழியே சிந்தித்தால் தன் கருத்தை முழுமையாகவும்,ஆழமாகவும்,தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும்.
எதிர்காலத்தில் விஞ்ஞானம் மொழிகளையெல்லாம் புறம்தள்ளிவிட்டு சில குறியீடுகளையே தன் மொழியாகக் கொள்ளப்போகிறது.அந்த சூழலில் செம்மொழிகள் சில மட்டுமே வழக்கில் இருக்கும்.
இன்றைய போக்கில் தமிழர் சிந்தனையும்,தமிழாய்வும் சென்றால் தமிழ் மொழி வழக்கொழிந்து போக வாய்ப்புள்ளது.

நாம் செய்யவேண்டியன

அறிவியல் துறையின் மணிமகுடமாகத் திகழ்வது கணிப்பொறி. கணிப்பொறியின் வளர்ச்சி நிலை இணையம்.தமிழர்கள் இணையம் குறித்த ஆழமான அறிவு பெற வேண்ணடும்.
அறிவியற்தமிழ் குறித்த ஆய்வு
இணையத்தமிழ் குறித்த ஆய்வு
இவையிரண்டும் இன்று தேவையான ஆய்வுகளாகும். நாம் தான் தாய்மொழி வழியே எல்லா அறிவியற்துறைகளையும் படிக்கும் வாய்ப்பிழந்து போனோம்.நம் வருங்காலத் தலைமுறையினராவது தாய்மொழிவழியே எல்லா அறிவியற்துறைகளையும் படிக்க வழிவகை செய்ய வேண்டும் அதில் உள்ள குறைகளைக் கண்டு களைய வேண்டும்.

முச்சங்கம் வைத்ததும் மூன்றுதமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.வலைமொழியில் சங்கம் வைத்து தமிழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.யாதும் ஊராக யாவரும் கேளிராக உலகுபரவி வாழும் தமிழர்களை இணையவழியே தமிழால் இணைப்பது நம் நாளையாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் நம் தமிழ் மொழி எதிர்காலத்தில் நிலைத்திருக்கும்.மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை என்பதை நாம் உணர வேண்டும்.






கவிஞர்.வைரமுத்து -
இதனால் சகலமானவர்களுக்;கும் என்ற நூலில் தமிழாய்வு குறித்தும்,அறிவியற்றமிழ் குறித்தும் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

இன்றின் தேவை என்பது என்ன?
தமிழினம் இருந்தது எங்ஙனம்?இழிந்தது எங்ஙனம்?
இவைதாம் ஆராய்ச்சியாளரின் அவசரத் தேவை.

இனம் ,மொழி , கலை , நாகரீகம் , பண்பாடு , பொருளாதாரம் போன்ற துறைகளை உழுதுபார்க்கவும் , பழுதுபார்க்கவுமான எழுதுகோல்கள் எழவேண்டும் .
ஒவ்வோர் ஆராய்ச்சியின் முடிவிலும் சிலநூற்றாண்டு சிக்கல்கள் அறுத்தெறியப்பட வேண்டும் .என ஆய்வின் தேவையை அறிவுறுத்துகிறார்.
இன்றைய ஆய்வு பற்றி கவிஞர் வைரமுத்து குறிப்பிடும் சிறுகதை

தவளை ஆராய்ச்சி செய்தான் ஒரு ஆராய்ச்சியாளன்.
ஒரு பலகையில் தவளையை உட்கார வைத்து அதன் ஒரு காலை வெட்டினான்.குதி என்றான் தவளை குதித்தது.
மறுகாலையும் வெட்டினான் குதி என்றான் தவளை குதித்தது.
மூன்றாம் காலையும் வெட்டினான் குதி என்றான் தவளை குதித்தது.
நான்காம் காலையும் வெட்டினான் குதி என்றான் குதிக்கவில்லை.
உடனே தான் கண்டறிந்த உண்மையை ஆய்வேட்டில் இவ்வாறு எழுதினான்
“நான்கு கால்கலையும் வெட்டிவிட்டால் தவளைக்;குக் காது கேட்காது என்று.”
இதுதான் இன்றைய ஆய்வின் நிலை.

அறிவியற்றமிழின் தேவை

 தமிழ் பக்தியாளர்களே நீங்கள் கோபுரங்களில் குடியிருக்க முடியாது.இறங்கி வாருங்கள்.
 நம்மை விட்டு விட்டு பூமி வேகமாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கவே இல்லை.
 உலகத்தின் எல்லாக் கரைகளிலும் அறிவியல் சமுத்திரத்தின் அலைகள் அடிக்க ஆரம்பித்துவிட்டன.
 நமது இனமும் அந்த அலையில் காலை நனைத்திருக்கிறது. என்று கூட சொல்லமாட்டேன்.
 அடித்த அலையின் வேகத்தில் நமது இனமும் கொஞ்சம் நனைந்திருக்கிறது என்று சொல்லுவேன்.
 உலக விஞ்ஞானம் மண்ணைத் துழாவியும் விண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறது.
 நாம் குறைந்தபட்சம் அந்தப்பொருள்களின் பெயர்களையாவது தமிழில் கண்டுபிடித்தோமா?
 தமிழைக் காவியமொழி என்று சொல்லியே நிறுத்திவிடாதீர்கள்.தமிழ் நீட்சிகொண்டது நீங்கள் தான் நீட்டிக்கத் தயாராய் இல்லை.சற்றே தமிழுக்கு சுதந்திரம் கொடுங்கள்.
 தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும் இடுப்பில் மணிமேகலையும் பாதத்தில் சிலம்பு மட்டும் போதாது. அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
 தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவு ஜீவிகளே!
 நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை தமிழில் யோசிக்கவும் இல்லை.
 முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருபது போல நமது முத்த மொழியும் வைரம பாய்ந்திருக்கிறது.
 நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.ஆனால் அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுக்கக் கர்வப்படலாம்.
 ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள மொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக்குளிக்கவே இல்லை.
 பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாய் லிபிகள் இல்லை.
 ஆனால் உலகத்தில் விரல் விட்டுச் சொல்லக்கூடிய பழைய மொழிகளில் குரல் விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
 ஊர்ச்சொற்கள் அனைத்திலும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்.
 இன்னும் இரண்டு மூன்று கடல்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.ஆனால் இந்த நூற்றாண்டுக்குத் தேவையான அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.


ஓ விஞ்ஞானமே
அறிவு கொடு!
ஏ தமிழா
உணர்வு கொடு!

என்று இயம்புகிறார்.

வியாழன், 9 அக்டோபர், 2008

இன்றைய தமிழாய்வு எங்கு போய்க் கொண்டிருக்கிறது ?

என் கேள்விக்கு என்ன பதில் ?

இன்றைய தமிழாய்வு எங்கு போய்க் கொண்டிருக்கிறது ?
இன்றைய தமிழாய்வின் தேடல் என்ன
பட்டமா ? பணமா ?
இது நீடித்தால் தமிழின் நிலை என்ன?
தங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யுங்கள் . தங்களின் கருத்துக்களைத் தொடர்ந்து என் கருத்தை நான் பதிவு செய்கிறேன்.

சனி, 16 ஆகஸ்ட், 2008

இணைய தளமும் பேசும்!



நாம் டைப் செய்யும் வார்த்தையை அப்படியே பேசுகிறது இந்த இணையதளம் http://www.oddcast.com/home/demos/tts/f ... rame1=talk இதற்குள் சென்று வார்த்தையை டைப் செய்து விட்டு பேசு என்ற மெனுவில் கிளிக்கினால் போதும். திரையில் இருக்கும் அனிமேஷனில் மனிதன் போன்று உருவாக்கப்பட்டுள்ள உருவம் நாம் டைப் செய்துள்ள வார்த்தையை அப்படியே கூறும். ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலும் பேசும் வகையில் அமைத்திருக்கிறார்கள்

வியாழன், 17 ஜூலை, 2008

தமிழா!நீ பேசுவது தமிழா?

தமிழா!நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...
தமிழா!நீபேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்
வாழ்க்கைஇனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...
தமிழா!நீ பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?
தமிழா!நீ பேசுவது தமிழா?
-உணர்ச்சிக் கவிஞர் .காசியானந்தன் .அவர்கள்


இக்கவிதை என்னை மிகவும் பாதித்த கவிதையாகும் .

திங்கள், 5 மே, 2008

வெள்ளி, 2 மே, 2008

இணையதளங்களை மொழி மாற்றிப் படிக்க

பிற மொழியில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை தமிழிலும் ,தமிழில் உள்ள இணையதளங்களை,வலைப்பதிவுகளை பிற மொழியிலும் மாற்றிப் படிக்க ............
அதற்கான இணையதளம் கீழ்கண்டது
http://girgit.chitthajagat.in/

தமிழின் சிறப்பு

தமிழ் மக்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பிடும் பொழுது "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து வாளாடு முந்தோன்றிய மூத்தக் குடியினர்" எனக் கூறப்படுகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ்ப் பெயர்கள்
காணப்படுகின்ற்றான்
2300 ஆண்டுகளுக்கு முந்தைய சில பிராமியக் கல்வெட்டுகள் தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ளன

2800 ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட ஏழாவது சாலமன் காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து கப்பல்களில் தமிழ்நாட்டுப் பண்டங்களை, தமிழ்நாட்டு வணிகர்கள் கிரேக்க நாட்டிற்குக் கொண்டுசென்று தமிழில் விலைபேசி விற்று வந்திருக்கின்றனர். அப்பொருட்களுக்கு இன்றளவும் தமிழ்ச்சொற்களே வழங்கப் பெற்று வருகின்றன. அரிசி -"ரைஸ்", மயில் தோகை - "டோ-கை", சந்தனம் - "சாண்டல்", தேக்கு -"டீக்கு", கட்டுமரம்- "கட்டமாரன்", இஞ்சி - "ஜிஞ்சர்", ஓலை - "ஒல்லா", கயிறு - " காயார்" என வழங்கி வருகின்றன. இத்தமிழ்ச் சொற்கள் அவர்களின் சொற்களாக மாறி பிரெஞ்சு, ஆங்கிலம் அகராதிகளில் இடம்பெற்றுள்ளன

2500 ஆண்டாயினும் தமிழ் இலக்கியங்களாகிய சங்க இலக்கியங்களும், தொல்காப்பிய இலக்கணமும், இன்று படித்தாலும் பொருள் புரிகிறது.
இது பிற மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகும்.

வ.ஐ. சுப்பிரமணியம்
(தஞ்சைத் தமிழ்ப் பல்கலைகழகம்)


தம் கல்லறையில் மேல் “இங்கே தமிழ் மாணவர் உறங்குகிறார் “ என்று கல்லில் பொறித்து வைக்குமாறு
(உயில்) எழுதி வைத்த முனைவர் ஜி.யு.போப்

கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம்


தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;
உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது.
மொழியறிஞர்
டாக்டர் கால்டுவெல்
Dr.Calwell



செவ்வாய், 22 ஏப்ரல், 2008

தாய் மொழிக்கல்வி (தமிழ்) இன்றைய நிலை

உலகம் பரவிய தமிழர்கள் ஐம்பத்தாறு நாடுகளில் வாழ்கின்றனர் .உலகெங்கும் வாழும் மனிதர்களுள் நூற்றுக்கு ஒருவர் தமிழராவர் .தமிழ் மொழியோ கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியது .நாகரீகம் ,பண்பாடு என பல கூறுகளை உள்ளடக்கிய இலக்கிய செழுமை கொண்டது .செம்மொழி என்னும் தரத்தையும் பெற்றுவிட்டது .இன்னும் பல்வேறு சிறப்புகளையும் கொண்ட தமிழ் மொழியின் இன்றைய சமூக மதிப்பீடு குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது

தாய் மொழிக் கல்வியின் தேவை


குசராத் கல்வி மாநாட்டில் காந்தியடிகள் ஆற்றிய சொற்பொழிவில் "கல்வி மொழி தாய்மொழியாக இருக்க வேண்டும் .தாய் மொழி தனக்குரிய இடத்தைப்பெற்றுவிட்டால் நமது மூளைக்கும் இன்னும் தேவையான அறிவைப் பெறுதற்கு வசதியாக விடுதலை கிடைக்கும் "என்றார் .

"கண்டம் பாயும் ஒரு ஏவுகணை தயாரிக்க ஆகும் பணத்தில் மூன்றரை லட்சம் ஆரம்பப் பள்ளிகள் கட்டமுடியும்
."என்று முன்னால் இந்திராகாந்தி நாடளுமன்றதிலே அறிவித்தார் .தாய்மொழி நன்கு கற்றால் அது நல்ல அடித்தளமாகிறது தாய் மொழி மூலம் ஒன்றைக் கற்பது எளிதாகிறது .

"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை "


என்பது உலகறிந்த உண்மை..

கருவில் உள்ள குழந்தை ஏழு மாதத்திலேயே மூளை முதிர்ச்சி பெற்று வெளி ஒலிகளைக் கேட்கிறது .என்கின்றனர் மருத்துவ அறிஞர்கள் .குழந்தை வளரும் சூழல் மொழித் தாக்கத்திற்கு அடிப்படையாக அமைகிறது. இன்றைய குழந்தைகள் கேட்கும் ஒலிகளும் ,சூழல்களும் அவர்களுக்கு தமிழை அன்னியமாக்கிவிடுகின்றன .அவர்கள் தாய் மொழியும் தெளிவின்றி ,பிற மொழியும் புரியாமல் தவிக்கின்றனர்.

தாய் மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் என்கின்றனர் உளவியலாளர்கள் .

இன்றைய சூழலில் தாய் மொழிக் கல்வி

அறிவுச்சுடர் என்ற மாணவி தனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என வருந்தி தற்கொலை செய்து கொண்டார் ."


தேனி பண்ணைப் புரத்தைச் சேர்ந்த விது என்ற மாணவன் ஆங்கிலம் தெரியாததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வில் ஆயிரத்து இருபத்துமூன்று மதிப்பெண் பெற்ற இவர் தாய் மொழியான தமிழ் வழி பயின்றதால் ஆங்கிலம் புரியவில்லை .ஐந்து பாடங்களில் தோல்வியுற்றதால் தற்கொலை செய்துகொண்டார்.

இவையெல்லாம் இணையத்தில் கிடைத்த உண்மைச் செய்திகள்.


இதுவே இன்றைய சூழழில் தாய்மொழிக் கல்வியின் நிலை .இதனை ,

டெல்லி வழி இந்தி"
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமஸ்கிருதம்
இசையின் வழி தெலுங்கு"


என இயம்புவர் தணிகைச் செல்வன்.

இரண்டாயிரமாவது ஆண்டு இரண்டாயிரம் பள்ளிகளாக இருந்த மெட்ரிக் பள்ளிகள் இன்று திசையெல்லாம் காட்சியளிகின்றன .இப்பள்ளிகள் பல தலைமுறைகளாக குழந்தைகளுக்கு தாய்மொழி கற்றுக் கொடுப்பதில்லை .ஏழை குழந்தைகள் இங்கு படிக்க முடியாத அளவுக்கு கட்டணம் பெறுகின்றன.அதனால் ஏழைக் குழந்தைகள் தரமான கல்வி பெற இயலாமல் தவிக்கின்றனர் .அதனால் அரசுப்பள்ளிகளை நாடுகின்றனர் .அரசுப்பளிகள் தலைமையாசிரியர் இல்லாமலும் ,போதிய வசதி இல்லாமலும் ஆசிரியர் பற்றாக் குறையோடும் இயங்கும் நிலை உள்ளது .இது அரசுப் பள்ளிகள் தரமான கல்வி கொடுக்க முடியாத சூழலை உருவாக்குகிறது .மத்திய மாநில அரசுகள் கல்வியில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் .குறிப்பாக தமிழக அரசு கல்வி நிலை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத் தலைமுறையின் வளர்ச்சி பாதிக்கப்படும் .

தாய்மொழிகளின் தேவையை அறிந்த ஐ.நா.இரண்டாயிரமாவது ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி இருபத்து ஒன்றாம் நாளை "உலக தாய் மொழி நாளாக "அறிவித்துள்ளது.இந்த நிலையில் இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டை "உலக தாய் மொழிகளின் ஆண்டாகவே"அறிவித்துள்ளது .

ஐ.நா.வின் உறுப்பு நிறுவனமான யுனச்கொவின் தலைமை இயக்குனர் ,கோய்ச்சிரோ கூறும் செய்தி அச்சமூட்டுவதாக உள்ளது.

"இப்போது பேச்சு வழக்கில் உள்ள ஏழாயிரம் மொழிகளில் சரிபாதி அடுத்த சில தலை முறைகளிலே காணாமல் மறைந்துவிடும்."

ஒரு இனத்தை அடையாளப்படுத்தி அதன் பண்பாடு நாகரீகம் போன்ற பல கூறுகளையும் அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்வது மொழியாகும்.அதனால் தாய்மொழியின் தேவையை அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.

தீர்வுகள்

தாய்மொழி வழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.தாய்மொழியான தமிழ் வழி பயில்வோருக்கு தேவையான பாடத்திட்டங்களை தமிழ்ப்படுத்த வேண்டும்.அதற்கு அறிவியல் தமிழ் எனும் துறை வளர அரசு ஊக்கமளிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் தாய்மொழி தெரிந்தவர்கள் முழுமையான கல்வி பெற இயலாத சூழலை அரசு உணரவேண்டும்.

ஆங்கிலம் தெரியாததால் தமிழ் படித்தவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டு தற்கொலை செய்து கொள்வதை அரசு அறிந்து அவர்களும் வாழ வழி செய்யவேண்டும்.

எதிர் காலத் தலை முறையினருக்காவது தாய்மொழி வழியில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரைப் பயில வகை செய்ய வேண்டும்.

தாய்மொழிக்கல்வி நல்ல அடித் தளமானால் அதன்மூலம் பல மொழிகளையும் எளிமையாக அறிந்துகொள்ளலாம் .கருத்தை தெளிவாக ,ஆழமாக, விரிவாக எடுத்தியம்ப அது உதவும்.

வணிக மயமான கல்வி நிறுவங்களை கண்டு அரசு வரைமுறைப்படுத்த வேண்டும்.
தாய்மொழி(தமிழ்)வழிக் கல்வி பயின்றோர் சமூகத்தில் மதிப்போடு வாழும் நிலையை அரசு உருவாக்க வேண்டும்பணிகளில் தாய் மொழி வழி கற்போருக்கு அரசு முன்னுரிமை தரவேண்டும் .
கல்வி கற்கும் மாணவர்களின் சுமையைக் குறைத்து ,அவர்கள் சுயமாக ,சுதந்திரமாக சிந்திக்க வாய்ப்பளிக்க வேண்டும் .

பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள்,பல அறிவியல்த் துறைகளையும் தாய்மொழி வழியே படிக்கவும், வினாத்தாள்களில் வினாக்கள் தமிழிலும் கேட்கப்படுவது வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது.

மொழி என்பது ஒரு தகவல்த் தொடர்பு சாதனம் மட்டுமல்ல ஒரு பண்பாட்டின், ஒரு இனத்தின் அடையாளம் என்பதை யாவரும் உணர்ந்தாலேயே தாய்மொழியை அழிவிலிருந்து காக்கலாம்.

மடலின் படிநிலைகள்

இலக்கியங்கள் மக்களின் வாழ்வியலை இயம்புவன .மனித வாழ்வில் காதல் அடிப்படையானது .காதல் நிறைவடையவிட்டால் இன்றும் காதலர் மனம் சாதலையே விரும்புகிறது .இவ்வுணர்வை இலக்கியங்கள் அகப்பொருளில் உரைக்கின்றன.அகத்துறைகளுள் ஒன்றான மடல் காதலின் முதிர்ந்த நிலையினது .அதனால் தான் இது பெருந் திணைக்கு உரியதாக உரைக்கப்படுகிறது .காதலும் சாதலும் எக்காலத்தும் யார் மாட்டும் நிகழ்வதாகும் .இந்த நிகழ்வுக்கும் மடல் என்ற அகத் துறைக்குமான தொடர்பை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது .

மடலின் இலக்கணம்

மடல் என்ற சொல் பனங்கருக்கு, பனைமடல் ஆகிய பொருள்களில் இலக்கியங்களில் பயின்று வருகின்றது .இதனை ,

"மடல்மா கூறும் இடனுமார் உண்டே" . என்பர் தொல்காப்பியர்.மேலும் காதல் பெருகிய நிலையில் காதலியைப் பெரும் கடைசி முயற்சியாக தலைவன் நாணத்தை விட்டு மடல் ஏறி ஊர் மன்றுக்கு வருவான் .இதனை ஏறியமடல் திறம் என்பர் தொல்காப்பியர் .