வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 1 மார்ச், 2011

பாடத்திட்டம் 80 சிபி (GB)


இன்றைய கல்வி மாணாக்கர்களைச் சிந்திக்கச் செய்கிறதா..?
இயந்திரமாக்குகிறதா..?

என்ற சிந்தனையைத் தூண்டிய குறுந்தகவல்..

பாடத்திட்டம் – 80 சி.பி (GB)
மாணவர்கள் படிப்பது – 80 எம்.பி (MB)
அவர்களின் மனதில் பதிவது – 80 கே.பி (KB)
தேர்வில் எழுதுவது – 80 பைட்சு (BYTES)
தேர்வு முடிவு – 00, 01
-----------------------------------
-----------------------------------

கற்பித்தல் என்பது என்ன?

மாணவர்கள் மதிப்பெண் பெறுவது ? புரிந்துகொள்வது? இரண்டில் எது முதன்மையானது என்ற சிந்தனையைத் தோற்றுவிக்கும்...

கல்விஅம்மா – இன்று பள்ளிக்கூடத்தில் என்ன சொல்லித் தந்தார்கள்..?
பையன் – இன்று எப்படி எழுதுவது என்று சொல்லித்தந்தார்கள்.
அம்மா – சரி! என்ன எழுதியிருக்க......?
பையன் - எழுதியதை எப்படிப் படிப்பது என்று சொல்லித்தரவில்லையே..!!!

---------------------------------
---------------------------------

துன்பம் பெரிதா..? அனுபவம் பெரிதா ? என்னும் கேள்வியை எழுப்பிய...

அனுபவம்.


நீ பட்ட துன்பத்தைவிட...
அதில் நீ பட் ட அனுபவம் பெரிது...!!!

---------------------------------------
---------------------------------------
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை என்ற கருத்தை அறிவுறுத்தும்..


பெருந்துன்பம்.

துன்பங்களை எண்ணிப் பார்ப்பது
இரண்டு முறை துன்பப்படுவதற்குச் சமமானது!
---------------------------------------
---------------------------------------
நாமெல்லாம் மனிதம் உடையவர்களா என்று தன்மதிப்பீடு செய்யச் சொல்லகிறது இந்தக் குறுந்தகவல்.


அன்புதான் இந்த உலகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து
ஆனால் அந்த அன்பே இங்கு பொய்யானால்
உலகத்தில் அதைவிட கொடிய நோய் எதுவுமில்லை!!

அன்னை தெரசா.

---------------------------------------
---------------------------------------

16 கருத்துகள்:

  1. அருமை...கல்வி குறித்த விசயம் சிந்திக்கச்செய்கிறது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பல கருத்துக்களை அருமையாக தொகுத்து தந்து இருப்பதற்கு நன்றிங்க. அருமை.

    பதிலளிநீக்கு
  3. //பையன் - எழுதியதை எப்படிப் படிப்பது என்று சொல்லித்தரவில்லையே..!!!//

    உண்மையில் இது நடந்து கொண்டு இருக்கு சார் கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. //பாடத்திட்டம் – 80 சி.பி (GB)
    மாணவர்கள் படிப்பது – 80 எம்.பி (MB)
    அவர்களின் மனதில் பதிவது – 80 கே.பி (KB)
    தேர்வில் எழுதுவது – 80 பைட்சு (BYTES)
    தேர்வு முடிவு – 00, 01//

    ha ha... true, but hilarious :)

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்க தூண்டுகின்ற தகவல்கள்....

    பகிர்வுக்கு நன்றிங்கய்யா... :)

    பதிலளிநீக்கு