வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை.....

எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமல்லாது வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமை தொல்காப்பியருக்குரியது.
அகம், புறம் எனப்பாகுபாடு பெற்ற வாழ்க்கைக்கு காதலும் வீரமும் அடிப்படையாக அமைந்தது.
அகம் களவு, கற்பு எனப்பாகுபாடு பெற்றது. களவியல், கற்பியல், அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியன வாழ்க்கைக்கான இலக்கணங்களாக அமைகின்றன.
மெய்பாட்டியல் வழி இன்றைய உளவியலும்,
உவமவியல் வழி அணிகளின் வளர்ச்சியும்
செய்யுளியல் வழி யாப்பிலக்கண வளர்ச்சியும்
மரபியல், உரியியல் வழி அகராதி நிகண்டுகளின் வளர்ச்சியும் அமைகிறது.
அவ்வடிப்படையில் பல சிறப்புகளையும் கொண்ட தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் உரை இணையத்தில் கி்டைப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவுள்ளது. நூலகத்தில் கிடைத்த பொருளதிகார நச்சினார்க்கினியர் உரையின் ஐபேப்பர் வடிவம்...

தொல்காப்பயிம் பொருளதிகாரம் உரை

4 கருத்துகள்:

  1. நல்ல இடுகை பல தகவல்களை அறியமுடிந்தது. பகிர்வுக்கு நன்றிகள்


    நேரம் இடம் கொடுக்காததனால் சில காலம் உங்கள் பக்கம் வரமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சந்ரு..

    பதிலளிநீக்கு
  3. நன்முயற்சி. தமிழாசிரியர்களுக்கு அறிவியல் தெரியாது என்ற இந்தச் சமூகத்தின் மூடநம்பிக்கை உங்களைப் போன்ற இளைஞர்களால் பொய்யாகிவிடும் என்பது உறுதி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. @முனைவர் ஆ.மணி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவரே

    பதிலளிநீக்கு