வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

நேரில் கண்ட சாட்சி வேண்டுமா ?


கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை – கலித்தொகை – 125

தாங்கள் செய்யும் தீச்செயல்களை நேரடியாகப் பார்த்தவர்கள் இல்லை என்று நெஞ்சறியச் செய்த கொடிய செயல்களை மற்றவர்களிடமிருந்து மறைத்துவைத்தாலும், செய்த அவர்கள் மனம் அதை நன்கறியுமாதலால் அதனைக் காட்டிலும் வேறு சான்று தேவையில்லை!

4 கருத்துகள்: