வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

உங்கள் பெயரின் பொருள் ? – பதிவு 2

2011 ஆம் ஆண்டு என் வலையில், உங்கள் பெயரின் பொருள்?? என்றொரு பதிவை வெளியிட்டேன். அந்தப் பதிவு 70 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் பதிவின் நோக்கம், அவரவர் தாய்மொழியில் குழந்தைகளுக்கான பெயர்கள் இடவேண்டும். தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதே ஆகும். அந்தப் பதிவின் வழி பலரும் என்னைத் தொடர்புகொண்டு தம் குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்களைக் கேட்டனர். நானும் பரிந்துரை செய்தேன். பலர் தம் பெயர் என்ன மொழி சார்ந்தது, அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொண்டனர்.     
இன்றும் பலர் தம் பெயர்கள் என்ன மொழி சார்ந்தது என்றும்,அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொள்ளாதவர்களாகவே உள்ளனர். அதனால், இன்றைய சூழலிலும் 
தமிழ் மொழியில் பெயர் வைக்கவேண்டும்!!
                   தமிழில் கையொப்பமிடவேண்டும்!!    
                          தமிழில் பேசவேண்டும்!!
இணையத்தில் தமிழில் உலவவேண்டும்!!
என்ற சிந்தனைகளை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
18.04.2017 இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் படித்து வியந்த செய்தி,
(நன்றி தமிழ் இந்து)
ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ‘குடியரசுத் தலைவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார்’ என்றோ பிரதமர் பலசரக்கு வாங்க நகரத்துக்கு சென்றுள்ளார் என்றோ யாராவது சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். ஆம். அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு பதவி, பிரபல பிராண்ட்களின் பெயரைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டத்தில் ராம்நகர் கிராமம் உள்ளது. சுமார் 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் கஞ்சார் சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் படிப் பறிவில்லாதவர்கள். ஆனாலும், இங்கு குழந்தைகளுக்கு அரசு உயர் பதவி மற்றும் உயர் அலுவலகங்களின் பெயர்களைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ஒருமுறை மிடுக்கான தோற்றத்துடன் தனது கிராமத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியரைப் (கலெக்டர்) பார்த்து அசந்துபோன ஒரு பெண், தனது பேரனுக்கு கலெக்டர் என பெயரிட்டுள்ளார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது. அவர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.
இதுகுறித்து ராம்நகர் கிராம அரசு பள்ளி ஆசிரியர் கூறும்போது, “சூழ்நிலை காரணமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்ற கிராம மக்கள், அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு ஐஜி, எஸ்பி, ஹவில்தார், மாஜிஸ்திரேட் என பெயரிடத் தொடங்கினர்” என்றார்.
இதுபோல மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஹை கோர்ட் என பெயரிட்டுள்ளனர். இவர் பிறந்தபோது, குற்ற வழக்கில் சிக்கிய இவரது தாத்தாவுக்கு ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியதால் இந்த பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், புந்தி மாவட்டம் நைன்வா தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் செல்போன் பிராண்ட்கள், சாப்ட்வேர் மற்றும் அதன் உதிரி பாகங்களின் பெயரையும் சூட்டத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து, நைன்வா தாலுகா சுகாதார மையத்தில் பெயர் பதிவு அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் சந்த் ரத்தோர் கூறும்போது, “பர்கானி, அர்னியா, ஹனுமந்தபுரா, சுவாலியா உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சாம்சங், நோக்கியா, ஜியோனி, ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன், சிம் கார்டு, சிப், மிஸ்டு கால் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டுகின்றனர்” என்றார். 

3 கருத்துகள்:

  1. வித்தியாசம் தான். ஹரியானாவிலும் இப்படி நிறைய பெயர்கள் உண்டு - காய்கறிகள், பழங்கள், பெருந்தலைவர்களின் பெயர்கள், பதவி என அனைத்தும் உண்டு. எங்கள் அலுவலகத்திலேயே மானேஜர் சிங் என்ற பெயர் உடையவர் இருந்தார்.

    பதிலளிநீக்கு
  2. எங்கும் எதிலும் எப்போதும்
    தமிழ் மின்ன வேண்டும்!

    பதிலளிநீக்கு