வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 28 மே, 2020

திருக்குறள் பொன்மொழிகள்: ( மின்னூல்) (Tamil Edition) Kindle Edition


      மனிதனால் மனிதனுக்கு எழுதப்பட்ட திருக்குறள் என்னும் உலகப்         பொதுமறைக்கு பல விளக்க உரைகள் இருந்தாலும், இந்த ஒரு வரி உரை என்பது எனது புரிதலின் வெளிப்பாடாகவே அமைகிறது..

       நவில்தொறும் நயம்தரும் நூல்! நுண்ணிய நூல்! மெய்ப்பொருள் காட்டும் நூல்! அற்றம் காக்கும் நூல்! அறிதோறும் அறியாமை காட்டும் நூல்! தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்ற நூல்! வருமுன்னர் காக்கும் நூல்! மெய்வருத்தக் கூலிதரும் நூல்! நுண்மாண் நுழைபுலம் தரும் நூல்! புகழொடு தோன்றிய நூல்! தனக்குவமை இல்லாத நூல்! கேட்டார்ப் பிணிக்கும் நூல்! நா நலம் தரும் நூல்! இடுக்கண் களையும் நூல்! என பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நூல் திருக்குறள். இந்நூலுக்கு எத்தனை உரைகள் வந்தாலும், எத்தனை மாநாடுகள் நடத்தினாலும் இதன் உட்பொருளை முழுமையாக யாரும் புரிந்துகொள்ள இயலாது. அதனால் தான் காலந்தோறும் இந்நூலுக்கு புதிய புதிய உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. உரைகளின் வரிசையில் இவ்வுரை, உரையாசிரியர்களைக் கடந்து நான் பெற்ற சிந்தனைகளை சமகால மொழிநடையில் பதிவுசெய்தல், திருக்குறள் ஒரு வாழ்வியல் வழிகாட்டி நூல் என்பதை உணர்த்துதல், பல்வேறு மொழிகளிலும் வழங்கப்பட்டுவரும் உலக அறிஞர்களின் பொன்மொழிகளுக்கு இணையான சிந்தனைவளமுடையது திருக்குறள் என்பதை வெளிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக எழுதப்பட்டது

 

- முனைவர் இரா.குணசீலன்

 

மின்னூல் பதிவிறக்க முகவரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக