வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 12 ஏப்ரல், 2010

நாட்டுப்புறவியல் கருத்தரங்க அறிவிப்பு.






எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக சென்ற ஆண்டு நடைபெற்ற செம்மொழி தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் 141 பேராளர்கள் கட்டுரையளித்திருந்தனர். கட்டுரைகள் நூலாக்கம் பெற்று வெளியிடப்பெற்றதுடன் கல்லூரி வலைப்பதிவில் இபேப்பர் வடிவிலும் வெளியிடப்பெற்றது. தற்போது நாட்டுப்புறவியல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். மேலும் விவரங்களுக்கு மேலே கொடுத்ததுள்ள அழைப்பிதழை சொடுக்கிப் பெரிதாக்கிப்பார்க்கவும். நாட்டுப்புறவியல் தொடர்பான தரமான கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு நூலாக்கம் செய்யப்படுவதுடன் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

14 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல் சகா. ஆனால் தமிழ் படித்து விட்டு வேறு பணியில் இருப்பவர்கள் சமர்பிக்க முடியுமா... எம். பில்., நெட் முடித்துவிட்டு ஊடகத்தில் பணிபுரிகிறேன் தோழரே. தகவலை எனக்கு மெயில் பண்ண முடியுமா தங்களால்.

    பதிலளிநீக்கு
  2. உங்களிடம் சிறு விவாதம்; சிலம்பு பற்றி. mylsamysakthivel@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செயுங்கள் தோழரே.
    வேறொன்றும் இல்லை. சிலப்பதிகாரம் எழுத இலங்கோவடிகல்லுக்கு தூண்டுகோலாக இருந்த நிகழ்வை சொல் முடியுமா. பின் விவாதிப்போம்.

    பதிலளிநீக்கு
  3. தரமான கட்டுரைகள் கல்விப்புலம் சார்ந்துதான் வரவேண்டும் என்பதில்லை நண்பரே தாங்கள் தாராளமாக கட்டுரையளிக்கலாம்

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகள். காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை என்ன செய்ய பரவாயில்லை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் சரி நண்பரே கருத்தரங்கம் முடிந்ததும் ஒரு பதிவாக எழுதி விடுங்கள் படித்து தெரிந்துகொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    பதிலளிநீக்கு
  6. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  7. மிக நல்ல முயற்சி. வாழ்த்துகிறோம். தமிழ் வாழ்க!

    பதிலளிநீக்கு
  8. @paarkkadal sakthi

    தான் ஆட்சிக்குவரவேண்டும் என்ற சோதிடத்தைப் பொய்யாக்கி வாய்மொழியாக வழங்கிவந்த கோவலன் கதையை காப்பியமாக்கினார் இளங்கோவடிகள் .மேலும் விவாதங்களுக்கு gunathamizh@gmail.comதொடர்புகொள்ளுங்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு