வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இந்தக்குழந்தைகள் சொல்வது கேட்கிறதா?



  • சுவர்  பெரிதாக இருப்பதால் கல்வி தன்னைவிட்டு மிகத்தொலைவில் இருப்பதாக இந்தக் குழந்தை எண்ணி்க்கொள்ளவில்லை. தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உறுதியுடைய மனம் இந்தக் குழந்தையிடம் உள்ளது அதனால் வெளியே இருந்துகூட இந்தக் குழந்தையால் கற்றுக்கொள்ளமுடிகிறது..



சில குழந்தைகள் பள்ளியின் உள்ளே இருந்தும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.

கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் 
இருந்தால் போதும் எதுவும் தடையல்ல 
என்ற உயர்ந்த சிந்தனையை இந்தக் காட்சி நமக்குப் புலப்படுத்துகிறது.



  •  அந்தக் காலத்தில் குழந்தைகள் தான் புத்தகங்களைக் கிழிப்பார்கள். இன்றெல்லாம் வன்முறை உணர்வைத் தூண்டித் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் புத்தகங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் நிழற்படம் இது.



  • கல்வி - பணம் இரண்டில் எது மதிப்பு மிகுந்தது?
   பணத்தைக் கொடுத்து கல்வியை வாங்குகிறோம்
  கல்வியை விற்றுப் பணமாக்குகிறோம்
இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது உண்மைதான்
அதற்காக அதிகவிலைகொடுத்து இந்தக்கல்வியை வாங்கும்போது
அதைப் பெறும் மாணவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்ற கருத்தையும் நாம் சிந்திக்கவேண்டும்.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
திருக்குறள் -391
தொடர்புடைய இடுகை


10 கருத்துகள்:

  1. இன்றைய சூழலில் கல்விச் செல்வம் விற்பனைக்கு வந்து விட்டது. விற்பனையின் தாக்கத்தினை நாம் பல இடங்களில் உணர்ந்து தான் கொண்டிருக்கின்றோம்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  2. கல்வியை வியாபாரமாக்கும் இந்த காலகட்டத்தில் இலவசமாகக் கிடைக்கும் கல்விக்கு மதிப்பிருக்காது என்பது உண்மைதான் முனைவரே...

    எனது தளத்தில்
    குழந்தை தொழிலாளி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் கவிஞரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

      நீக்கு
  3. அன்று கல்வி ஒரு சேவை...

    இன்று கல்வி பணம் கொழிக்கும் நல்ல தொழில்...

    குழந்தைகள் மீது தவறில்லை...

    பணத்திற்கும்... இல்லை இல்லை... படிப்பிற்கும் மனிதாபிமானத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது... (இன்று அல்ல... என்றும்...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அன்பரே.. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள்.

      நீக்கு
  4. கல்வி பறிக்கும் அரசியல் இப்பவெல்லாம்.பணமொன்றேதான் வாழ்க்கையும் ஆகிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஹேமா..
      தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும்நன்றி.

      நீக்கு