வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


திங்கள், 8 டிசம்பர், 2025

பழமொழி நானூறு – வாழ்வியல் அறம்

 


பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி 4 ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

தன்னை அறியும் தலைவன்

பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்

சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்

பெரி(து)ஆள் பவனே பெரிது.   82

 பொன் போல் நன்மை பயப்பனவற்றையும், பொல்லாதனவற்றையும்..