வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

இன்பதுன்பங்கள் (கலீல் ஜிப்ரான்)


◊ இடுக்கன் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல் (குறள் -621)

என்று துன்பம் வரும் போது சிரியுங்கள். துன்பத்தை வெல்ல இதைவிட சிறந்தவழி வேறேதும் இல்லை.

◊ இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (குறள் -621)

என்று துன்பத்தைக் கண்டு துவளாதவர்கள் துன்பத்திற்கே துன்பம் தரும் ஆற்றலைப் பெறுவர் என்பர் வள்ளுவர்.

இதே கருத்தை கலீல் ஜிப்ரான்…………



◊ அதன் பிறகு, ஒரு பெண்மணி, “எங்களுக்கு மகிழ்ச்சியைப் பற்றியும் கவலையைப் பற்றியும் சொல்லுங்கள் என்று கூறினாள்.

அவர் பதில் கூறினார்.

மகிழ்ச்சி என்பது, முகத்திரை நீக்கிய உங்கள் துன்பம் தான்.


சிரிப்பு பிறக்கும் உங்கள் சொந்தக் கிணற்றை, அடிக்கடி உங்கள் கண்ணீர் நிறைத்துவிடுகின்றது.

அது வேறு எப்படி இருக்க முடியும்.

எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகத் துன்பம் உங்களைச் செதுக்குகின்றதோ, அந்த அளவுக்கு நீங்கள் நிறைந்த இன்பம் பெறுவீர்கள்.

திராட்சை மதுக் கோப்பையை நீங்கள் ஏந்தி இருக்கிறீர்கள்களே, அது குயவனின் சூளையில் வெந்தது அல்லவா?

உங்களுக்கு ஆன்ம அமைதி தரும் புல்லாங்குழல், கத்திகளால் துளையிடப்பட்டது அல்லவோ?

நீங்கள் மகிழ்ச்சியடையும் போது, உங்கள் இதயத்திற்குள் ஆழ்ந்து பார்த்தால், உங்களுக்கு இன்பம் தருவதெல்லாம், உங்களுக்குத் துன்பம் தந்தவையே என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

“இன்பம் துன்பத்தைவி்ட மேலானது“ என்று உங்களில் சிலர் சொல்லக்கூடும் “இல்லை துன்பம் தான் பெரிது“ என்று சிலர் சொல்லக்கூடும்.

ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவை பிரிக்கமுடியாதவை.

ஒன்றாகத்தான் அவை வருகின்றன. ஒன்று உங்களுடன் தனியே அமர்ந்துகொள்ளும். மற்றொன்று உங்கள் படக்கையில் படுத்துக்கொள்ளும்.

உண்மையில், உங்கள் இன்பம், துன்பம் என்ற தட்டுகளுக்கிடையில் ஊசலாடும் தராசு நீங்கள்.

நீங்கள் வெறுமையாகும் போதுதான், அசையாமல் நடுநிலையில் நீங்கள் நிற்கமுடியும்.

தங்கம், வெள்ளி நிறுப்பவன் உங்களை உயர்த்திப் பிடிக்கும்போது அவனுக்கு உங்கள் இன்பமும் துன்பமும் வேண்டும் எடைபோட..

5 கருத்துகள்: