உயிர் இருக்கிறது
உணர்ச்சி இல்லை!
உதடு இருக்கிறது
சிரிப்பு இல்லை!
என்ன இது?
இக்கால இயந்திரமா?
உற்றுப் பார்க்கிறேன்..
அட!
இவர்கள் மனிதர்கள்தான்!
நீங்களெல்லாம்..
உயிரோடு செத்துவிட்டீர்களா?
இல்லை
செத்தபின்னும்
உயிர்வாழ்கிறீர்களா?
என்று கேட்கிறேன்..
நாணயங்களின் ஓசையில் – என்
நா நயங்களின் ஓசை
இவர்களுக்குக் கேட்கவில்லை!
மீண்டும் கேட்கிறேன்..
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
முகத்தின் அழகு சிரிப்பில்தானே
தெரியும்..?
எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
சிரிப்பை அடக்கம் செய்த
கல்லறைஉதடுகள் திறந்து
இவர்கள் சொல்கிறார்கள்..
ஒன்றை இழந்தால்தானே
இன்னொன்றைப் பெறமுடியும்!
நாங்கள் சிரிப்பை விதைத்து
பணத்தை அறுவடை செய்யும் உழவர்கள்
என்று..
//நாங்கள் சிரிப்பை விதைத்து
ReplyDeleteபணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..//
அருமை,குணசீலன்.
நன்றி ஐயா
Deleteநச் கவிதை..!
ReplyDeleteநன்றி விக்கி
Deleteஅருமை ஐயா.
ReplyDeleteநன்றி.
நன்றி ஐயா
Delete//நாங்கள் சிரிப்பை விதைத்து
ReplyDeleteபணத்தை அறுவடை செய்யும் உழவர்கள் என்று..//
ஒரே வரியில் உழவர்களின் நிலையை எடுத்துச் சொல்லி விட்டீங்க.சிறப்பாக இருக்கு.
மகிழ்ச்சி இராம்வி
Deleteஅருமையான பத்தி ஐயா
ReplyDeleteநன்றி சேகர்
Deleteஇப்படி பல பொம்மைகளை நித்தம் காண முடிகிறது ..
ReplyDeleteஏன் நானே சில நேரங்களில் இப்படி தான் இருந்து வருகிறேன் ..
கவிதை சுடுகிறது
புரிதலுக்கு நன்றி அரசன்
Deleteஉதடு இருக்கிறது
ReplyDeleteசிரிப்பு இல்லை!
எங்கே உங்கள் சிரிப்பு? என்று..
சிரிப்பை அடக்கம் செய்த
கல்லறைஉதடுகள் திறந்து
இவர்கள் சொல்கிறார்கள்..
சிறப்பு..
நன்றி கவிஞரே
Deleteazhakaana pathivu!
ReplyDeleteநன்றி சீனி
Deleteபணம் தேடும் வாழ்க்கையில் நாம் தொலைத்தவை எவ்வளவோ. அதில் சிரிப்பும் ஒன்று. நானும் இவ்வித மனிதர்களை சந்தித்திருக்கிறேன். கொஞ்சமேனும் சிரிக்கத் தெரியாத இவர்கள் வாழ்ந்துதான் என்ன ஆக வேண்டி கிடக்கிறது? அருமையான பதிவு சார்.
ReplyDeleteநன்றி டேனியல்.
Deleteசிரிப்பை தொலைத்து
ReplyDeleteசில்லறையை தேடும்
முகங்கள் பெருகிக் கொண்டே
தான் இருக்கின்றன முனைவரே...
அழகுக் கவிதை படைத்தீர்கள்...
நன்று.
நன்றி மகேந்திரன்
Deleteசிரிப்பு என்னும் அற்புத உணர்வு வெளிப்பாட்டை அடியோடு மறந்துவிட்டவர்களைச் சாடாமல் சாடியவிதம் வெகுநன்று. போகும் போக்கில் சிறு புன்னகையும் சிந்த மறந்தவர்களின் இறுகிய முகங்களைப் பார்க்கும்போது நமக்குள்ளும் இறுக்கம் தொற்றிக்கொள்வது உண்மைதான்.
ReplyDeleteபுரிதலுக்கு நன்றி கீதா.
Deleteபடித்து விட்டு மனம் நெகிழ்ந்தது ! பகிர்வுக்கு நன்றி Sir !
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteகுண சீலன் உங்களை நினைகையில் பெருமை எனக்கு தமிழ் படித்தோர் எல்லாம் தமிழன் என்று சொல்லிவிட முடியாது தமிழன் பெருமையை உணர்த்துபவன் மட்டுமே உண்மை தமிழன் வளர்க உங்கள் தமிழ் பணி
ReplyDeleteவேர்களைத்தேடி வந்தமைக்கு நன்றிகள்
Deleteஉணர்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் குணா !
ReplyDeleteநன்றி ஹேமா
Deleteமனிதன் இக்கால இயந்திரம்..... நல்ல வருணனை.... இக்கால மனித இயல்புகளை வேதனையுடன் எடுத்தியம்பிய விதம் மிக அருமையாய் இருந்தது..... நன்றி.....
ReplyDeleteநன்றி எழிலாள்.
ReplyDelete