வண்டி ஓட்டத்தெரியாத அரசியல்வாதிகள்.
அரசனின் ஆட்சித்திறனை ஒரு வண்டியாக உவமித்துத் தொண்டைமான் இளந்திரையன் பாடுவதாக இப்பாடல் அமைகிறது . ஆளுவோன் திறமையுடையவனாக இருந்தால் ...
அரசனின் ஆட்சித்திறனை ஒரு வண்டியாக உவமித்துத் தொண்டைமான் இளந்திரையன் பாடுவதாக இப்பாடல் அமைகிறது.
ஆளுவோன் திறமையுடையவனாக இருந்தால் வண்டி எந்த இடையூறும் இன்றி இனிதாகச் செல்லும்.
அவனுக்கு சரியாக வண்டியை ஓட்டத்தெரியாவிட்டால் நாடு பகையென்னும் சேற்றில் அழுந்தி மிகப்பல துன்பங்களை அடையும்.
கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு,
| |
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.
|
|
புறநானூறு -185
பாடியவர்:
தொண்டைமான் இளந்திரையன்
|
இந்தப் புறநானூற்றுப் பாடல் அக்கால மன்னராட்சி முறையின் நெறிமுறைகளைக் காட்சிப்படுத்துகிறது..
இந்தப்பாடலில்,
மன்னன் என்பதற்குப் பதிலாக அரசியல்வாதிகளையும்
வண்டி என்பதற்குப் பதிலாக நம் நாட்டையும்,
பகை என்பதற்குப பதிலாக நம் நாடு சந்திக்கும் சவால்களையும் கருத்தில் கொள்வோம்..
நாம் ஏன் இப்படியிருக்கிறோம்..
நம் நாடு ஏன் இப்படியிருக்கிறது என்று.
இப்போது புரிகிறதா...?
தமிழ்ச்சொல்
அறிவோம்
கால் - உருளை (சக்கரம்)
பார் - வண்டியின் உறுப்புகளுள் ஒன்று
ஞாலம்
- உலகம்
சாகாடு
- வண்டி
கைப்போன்
- செலுத்துவோன்
ஊறு - துன்பம்
ஆறு - வழி
தேற்றான் - தெளியான்
தேற்றான் - தெளியான்
அள்ளல்
- சேறு
தலைத்தலை
- மேலும்மேலும்
தொடர்புடைய இடுகை
14 கருத்துகள்
நன்றாகவே புரிகிறது சார்...
Replyதமிழ்ச்சொற்களுக்கு மிக்க நன்றி...
அருமையான புறநானூற்று பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே!
Replyஅறிந்தேன் சில தமிழ் சொற்கள்!
சரியா சொன்னீங்க .
Replyபகிர்வுக்கு நன்றி .
//எங்கே இருக்கிறோம்?//
Replyஎல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் நண்பரே...
எனது தளத்தில் என் காதல் க(வி)தை... 03
Thx For Sharing This Useful Post
Replyபுரிகிறது!என்ன செய்ய?ஊழ்?!
Replyஉண்மையை உரைத்தீர்கள்! உணர்வாரா ஆள்வோர்!
தங்கள் புரிதலுக்கு நன்றி அன்பரே
Replyதங்கள் தொடர்வருகைக்கம் மறுமொழிக்கும் நன்றிகள் நண்பா.
Replyநன்றி நண்பரே
Replyநன்றி கவிஞரே
Replyநன்றி நண்பரே
Replyநன்றி குட்டன்
Replyநன்றி புலவரே
Reply