வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 26 ஜனவரி, 2009

சங்க இலக்கியம்

எட்டுத்தொகை நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம்
என்று இத்திறத்த எட்டுத் தொகை


எட்டுத்தொகை நூல்கள்:

1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு

பத்துப்பாட்டு நூல்களை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள தனிப்பாடல்:

"முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து."

பத்துப்பாட்டு

1. திருமுருகாற்றுப்படை - நக்கீரர்-317 அடிகள்

2. பொருநராற்றுப்படை - முடத்தாமக்கண்ணியார் -248 அடிகள்

3. சிறுபாணாற்றுப்படை -நல்லூர் நத்தத்தனார் - 269 அடிகள்

4. பெரும்பாணற்றுப்படை-கடியலூர் உருத்திரங்கண்ணனார்-500அடிகள்

5. கூத்தாராற்றுப்படை(மலைபடுகடாம்)-பெருங்கௌசிகனார்-583அடிகள்

6. மதுரைக் காஞ்சி -மாங்குடி மருதனார் - 782 அடிகள்

7. முல்லைப்பாட்டு - நப்பூனார் -103 அடிகள்

8. குறிஞ்சிப்பாட்டு - கபிலர் - 261 அடிகள்

9. நெடுநல்வாடை நக்கீரர்-317அடிகள்

10. பட்டினப்பாலை-கடியலூர் உருத்திரங்கண்ணனார்-500 அடிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக