வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 12 செப்டம்பர், 2009

தனிமகனார்



தனிமை கொடுமையானது.
அதிலும் அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் மிகமிகக் கொடுமையானது.
தனிமை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு மாதிரி உணரப்படும்.

சிலர் தனிமை வரம் என்பார்கள்
சிலர் தனிமை சாபம் என்பார்கள்

தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி ஒருத்தியின் தனிமைப் புலம்பல் நற்றிணைப்பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவனின் பின்னே சென்ற தன்நெஞ்சம் மீண்டும் திரும்பி வரவில்லை..
உடலுக்கு உயிர் இங்கு காவலாக இருக்கிறது.
அந்த உயிரும் உடலில் தங்கும் அளவாவது உணவு உட்கொள்வதால் தான் தங்கியிருக்கிறது.எப்போது தன்னை விட்டு நீங்கும் என்பதும் தெரியாது..

இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தனிமகன் என்பதாகும்.
இது இவரின் இயற்பெயர் அல்ல..
இப்பாடலில் சிறந்த தொடரைக் கையாண்டதால் பெற்ற பெயர்.
தனிமகன் என்னும் பெயருக்கான காரணத்தைப் பாடல் வழி காண்போம்.


'குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி
மண் திணி ஞாலம் விளங்க கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி எவ் வாயும்
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு
நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டு ஒழிந்து
உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர்
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப்
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே


153 பாலை - தனிமகனார்

'பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது'




திருமணத்துக்கு இடையிலான தலைவனின் பிரிவைத் தலைவியால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

தன் உடலில் உயிர் நீங்கிச் சென்றது போல வருந்தினாள்.

மழை பொழிந்த மேகம் தெற்கே சென்றது போல என் நெஞ்சம் தலைவனின் பின்னே சென்று விட்டது.பின் அங்கே தங்கி என்னை மறந்துபோனது.

என் உடலோ போருக்கும் பின்னர் மக்கள் நீங்கிய ஊரில் காவல் செய்யும் தனி மனிதன் போல வருந்தியது என்றாள் இதுவே பாடலின் பொருள்..


கீழைக் கடலில் நீரை முகந்த மேகம் மின்னல் மின்னி இடிமுழக்கத்துடன் மழையாகப் பொழிந்தது. பின்னர் தெற்குதிசையில் சென்று மறைந்தது. அதுபோல என் நெஞ்சம் என்னை நீங்கித் தலைவனிடம் சென்று அவனிடமே தங்கியது.
என்உடலோ,

போர்நடந்த ஊரில் மக்கள் வெளியேறிய பின்னரும் காவல் புரியும் தனிமகன் போல தனித்து வருந்தியது. உடலில் உயிர் தங்கும் அளவு உணவு உண்பதால் என் உடலில் உயிர் இன்னும் தங்கியுள்ளது என்கிறாள் தலைவி....

இப்பாடலில் தலைவியின் நெஞ்சம் தலைவனுடன் சென்ற பின்னர் தன் உடல் மக்கள் நீங்கிய ஊரைத் தனித்துக் காவல் செய்யும் தனிமகன் போல வருந்தியது என்று சுட்டப்படுகிறது..
இதில் தனிமகன் என்னும் தொடரினிமை கருதி இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தனிமகன் என்றே வழங்கப்பட்டது.

12 கருத்துகள்:

  1. தனிமை வரம் என்று சொல்பவர்கள் சிறுது காலம்தான்.
    பிறகு சாபம் என்று கூறுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. தனிமை கொடுமையானது.
    அதிலும் அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் மிகமிகக் கொடுமையானது.
    தனிமை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு மாதிரி உணரப்படும்.

    ஆம் குணா அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் கொடுமையே.... நல்ல தலைப்பு

    பதிலளிநீக்கு
  3. தலைவனின் பின்னே சென்ற தன்நெஞ்சம் மீண்டும் திரும்பி வரவில்லை..
    உடலுக்கு உயிர் இங்கு காவலாக இருக்கிறது.
    அந்த உயிரும் உடலில் தங்கும் அளவாவது உணவு உட்கொள்வதால் தான் தங்கியிருக்கிறது.எப்போது தன்னை விட்டு நீங்கும் என்பதும் தெரியாது

    மிகச்சரியே.....

    பதிலளிநீக்கு
  4. கீழைக் கடலில் நீரை முகந்த மேகம் மின்னல் மின்னி இடிமுழக்கத்துடன் மழையாகப் பொழிந்தது. பின்னர் தெற்குதிசையில் சென்று மறைந்தது. அதுபோல என் நெஞ்சம் என்னை நீங்கித் தலைவனிடம் சென்று அவனிடமே தங்கியது.

    உவமை அருமை.....

    பதிலளிநீக்கு
  5. நல்ல இடுகை.

    இம்மாத வரலாறு.காம் இதழிலும் இதே பாடலைப் பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளது.

    நன்றி
    கமல்
    www.varalaaru.com

    பதிலளிநீக்கு
  6. தனிமை தனிமை தனிமை
    தவம் ரணம் சுகம்
    நம்முடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளில்

    தாங்களின் எழுத்து நடை அருமை

    பதிலளிநீக்கு
  7. தனிமை வரம் என்று சொல்பவர்கள் சிறுது காலம்தான்.
    பிறகு சாபம் என்று கூறுவார்கள்.

    (வெங்கட்)

    உண்மைதான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. தனிமை கொடுமையானது.
    அதிலும் அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் மிகமிகக் கொடுமையானது.
    தனிமை ஒவ்வொருவராலும் ஒவ்வொரு மாதிரி உணரப்படும்.

    ஆம் குணா அன்புக்குரியவர்களை நீங்கி வாழ்தல் கொடுமையே.... நல்ல தலைப்பு
    (தமிழரசி)
    நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு
  9. தலைவனின் பின்னே சென்ற தன்நெஞ்சம் மீண்டும் திரும்பி வரவில்லை..
    உடலுக்கு உயிர் இங்கு காவலாக இருக்கிறது.
    அந்த உயிரும் உடலில் தங்கும் அளவாவது உணவு உட்கொள்வதால் தான் தங்கியிருக்கிறது.எப்போது தன்னை விட்டு நீங்கும் என்பதும் தெரியாது

    மிகச்சரியே.....

    கீழைக் கடலில் நீரை முகந்த மேகம் மின்னல் மின்னி இடிமுழக்கத்துடன் மழையாகப் பொழிந்தது. பின்னர் தெற்குதிசையில் சென்று மறைந்தது. அதுபோல என் நெஞ்சம் என்னை நீங்கித் தலைவனிடம் சென்று அவனிடமே தங்கியது.

    உவமை அருமை

    கருத்துரைக்கு நன்றி தமிழ்..

    பதிலளிநீக்கு
  10. நல்ல இடுகை.

    இம்மாத வரலாறு.காம் இதழிலும் இதே பாடலைப் பற்றிய கட்டுரை இடம்பெற்றுள்ளது.

    நன்றி
    கமல்
    www.varalaaru.com

    பார்த்து மகிழ்ந்தேன் நண்பரே..

    தனிமகனார் என்னும் புலவரை மட்டுமே சுட்டுவதாக இவ்விடுகை அமைகிறது..
    நான் இந்த வலைப்பதிவில்

    தொடரால் பெயர் பெற்ற 27 புலவர்கள் பற்றியும் எழுதி வருகிறேன்..

    பதிலளிநீக்கு
  11. நன்று அருமை(கண்மணி)

    கருத்துரைக்கு நன்றி கண்மணி..

    பதிலளிநீக்கு