வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பெருநகை கேளாய்…



என்னை நீங்கிப்போய்வருகிறேன் என்று சொல்வதானால் அதனை என்னிடம் சொல்லவேண்டாம். உயிரோடு இருப்பவர்கள் யாரோ அவர்களிடம் சென்று சொல்லுங்கள். போகவில்லை என்பதை மட்டுமே என்னிடம் சொல்லுங்கள். என்பாள் குறள் சுட்டும் தலைவி.

செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை.. (குறள் - 1151)

ஏனென்றால் தலைவனை நீங்கித் தலைவியால் வாழ முடியாது இறந்துபடுவாள் என்பது பொருள்.

சங்ககாலத் தலைவியின் நிலை………….


தோழி……..
உன் காதலர் உன்னை ஒருநாள் பிரிந்து தங்கினாலும் நீ உயிர் வாழ்வது அரிது. இந்நிலையில் பெரு நகைப்பிற்குரிய செயல் ஒன்றை நீ கேள்.

நம்மைவிட்டு நீங்கித் தலைவர் தனியே பொருள் தேடச் செல்லலாம் என்ற எண்ணம் கொண்டார் என நம் அருகிலிருக்கும் ஏவலர் கூறுகின்றார்.

பாம்பின் தலை நடுங்குமாறு பெய்யும் மழையில் இடியின் பேரொலியைத் தனியே கேட்டுக்கொண்டு அவர் வினை முடித்து மீளுமளவும் வாழ்ந்திருத்தல் வேண்டும் எனவும் உரைப்பா்.

இது பெருஞ்சிரிப்பை வரவழைப்பதாக அல்லவா இருக்கிறது…………….?


பெரு நகை கேளாய், தோழி! காதலர்
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்
பொம்மல் ஓதி! நம் இவண் ஒழியச்
செல்ப என்ப, தாமே; சென்று,
5 தம் வினை முற்றி வரூஉம் வரை, நம் மனை
வாழ்தும் என்ப, நாமே, அதன்தலை-
கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்ப,
படு மழை உருமின் உரற்று குரல்
நடு நாள் யாமத்தும் தமியம் கேட்டே.
ஔவையார்

நற்றிணை. 129 (குறிஞ்சி)
(பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது)

தலைவன் பிரிந்து செல்லவிருக்கிறான் என்பதை உணர்ந்த தோழி அதனைத் தோழிக்கு அறித்துதல்.


பாடல் வழி.

² பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகளை முகம்புக்கது என்னும் அகத்துறை விளக்கம் பெற்றது.
² தலைவனைத் தலைவி மிககககககககககககவும் நேசிக்க்க்க்கிறாள் என்பது தோழியின் கூற்றுவழியகாப் புலனாகிறது.
² தலைவியைத் தனியே விட்டுவிட்டுத் தலைவன் மட்டும் செல்கிறான் என்பது தோழிக்குப் பெருநகையேற்படுத்துவதாக இருக்கிறது. ஏனென்றால் தலைவனை நீங்கித் தலைவியால் எவ்வாறு வாழ முடியும்? இந்த சின்ன உணர்வைக் கூட அறிந்துகொள்ளாத அறியாமையுடையவானக இருக்கிறானே தலைவன் என்பதால் தோழிக்கு பெருநகை (பெருஞ்சிரிப்பு) ஏற்பட்டது.

9 கருத்துகள்:

  1. பாடல் வழி செய்திகள் மூலம் சங்க கால குறிப்புகளை அறிந்து கொள்கிறோம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பாடலும் அதற்கான விளக்கமும் அருமை முனைவரே..!

    பதிலளிநீக்கு
  3. அருமையான உரை, நன்றி முனைவரே

    பதிலளிநீக்கு