வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 8 அக்டோபர், 2011

வெள்ளைத்தாள் சொன்னது


கலீ்ல் கிப்ரான் அவர்களின் கவிதைகளும், கதைகளும் படிப்போர் மனதில் ஆயிரம் ஆயிரம் சிந்தனைகளை ஊற்றெடுக்கவைக்கும் தன்மையனவாகும்.. நான் விரும்பிப் படித்த கதை ஒன்று..

பனி போன்ற வெள்ளைத்தாள் ஒன்று சொன்னது..

“நான் தூய்மையாகப் படைக்கப்பட்டேன்!
தூய்மையாக என்றென்றும் இருப்பேன்!
அசுத்தம் என்னைத் தொடமுற்படின்,
அல்லது இருட்டுத் தன்மையால்
நான் துன்பப்டுதலைக் காட்டிலும்,
எரிக்கப்பட்டு வெண்ணிறச் சாம்பலாய்
ஆகிவிடுவேன்.“

எழுது மை இருக்கும் புட்டி
வெள்ளைத் தாள் சொல்வதைக் கேட்டது.

தன் கருப்பு இதயத்தில் அது சிரித்தது.
ஆனால் அதன் அருகே செல்லும்
துணிவின்றி இருந்தது.

பல்வண்ண எழுதுகோல்களும்
வெள்ளைத்தாள் சொன்னதைக் கேட்டன.
அவையும் அதன் அருகில் வரவே இல்லை.

பனிபோன்ற வெள்ளைத்தாள்
எப்போதும் தூய்மையாக கற்புடனேயே இருந்தது.

ஆம் தூய்மையாக கற்புடனேயே

வெற்றுத் தாளாகவே!

33 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே!
    சிந்தனையை தூண்டிவிடும் வரிகள் தான்!

    பதிலளிநீக்கு
  2. என்ன ஒரு சிந்தனை?அருமையான பகிர்வு முனைவரே!

    பதிலளிநீக்கு
  3. கலில் கிப்ரான் படைப்புகள் எப்போதுமே சிந்தனையை தூண்டுபவைதான்!!!என் தந்தை எனக்கு எழுதும் கடிதங்களில் கலில் கிப்ரானின் மேற்க்கோள் இருக்கும்...இன்னும் நிறைய அவரின் படைப்புகளைத்தாருங்கள்... நன்றி

    பதிலளிநீக்கு
  4. மிட்டாய் கதைகள் என்ற புத்தகம் படிக்க மிகவும் அருமை, படிப்பவர்களின் மன நிலை பொறுத்து ஒவ்வொரு அர்த்தமாய் மாறுவதும் அருமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  5. வெள்ளைத்தாள் சொன்னது.. வெளுக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவலுக்கு நன்றிங்க முனைவரே ..

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவலுக்கு நன்றிங்க முனைவரே ..

    பதிலளிநீக்கு
  8. நல்ல சிந்தனை. ஆனால் ஓன்று எனக்கு புரியவில்லை. வெள்ளை தாள் அப்படியே இருப்பதனால் பலன் என்ன..? எழுத்தொன்று இல்லாவிடில் அது படைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன..?

    பதிலளிநீக்கு
  9. நல்ல சிந்தனை. ஆனால் ஓன்று எனக்கு புரியவில்லை. வெள்ளை தாள் அப்படியே இருப்பதனால் பலன் என்ன..? எழுத்தொன்று இல்லாவிடில் அது படைக்கப்பட்டதன் நோக்கம் தான் என்ன..?

    பதிலளிநீக்கு
  10. // பனிபோன்ற வெள்ளைத்தாள்
    எப்போதும் தூய்மையாக கற்புடனேயே இருந்தது.

    ஆம் தூய்மையாக கற்புடனேயே

    வெற்றுத் தாளாகவே!//


    நல்ல கவிதை முனைவரே
    எடுத்துக் காட்டினீர் நன்றி

    புலவர் ணா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. மிகச் சரி
    பயன்படாத அறிவு
    உபயோகமற்ற பொருள்
    யாருக்கும் பயன்படாத மனிதன்
    இருந்தாலும் என்ன இல்லையென்ன்று
    ஆனால்தான் என்ன
    அருமையான கவிதையை மிக எளிமையாக
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி த.ம 9

    பதிலளிநீக்கு
  12. பயனுள்ள தகவல்……
    Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    பதிலளிநீக்கு
  13. கவிதை அருமை.சிறப்பான சிந்தனையின் வெளிப்பாடு ...
    பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  14. @thendralsaravanan தங்கள் ஆர்வம் மகிழ்வளிப்பதாக உள்ளது நன்றி தென்றல்.

    பதிலளிநீக்கு
  15. @உங்கள் நண்பன் தங்கள் கேள்வியே கேள்விக்கான பதில் நண்பரே..

    சிலர் அப்படித்தான் வெள்ளைத்தாள் போல இருக்கிறார்கள்.

    அடிதாங்கும் கற்களல்லவா சிற்பமாகும்..

    பதிலளிநீக்கு