வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 11 அக்டோபர், 2012

ப-த-வி வேண்டுமா..?


குடியரசுத்தலைவர்
பிரதமர்
முதல்வர்
அமைச்சர்
அரசுஅலுவலர்
என ஏதேதோ பதவிகளுக்காக இன்று பெட்டிகள் கைமாறுகின்றன.

பதவி ஆசையில்லாதவங்க யாருதான் இருக்காங்க..?

வாழும்போதே பதவிக்காக பரிதவிக்கும் மனிதன்.
இறந்தபின்பும் வேண்டிநிற்கிறான் சிவலோகப் பதவியை, வைகுண்டப் பதவியை..

“ஆசையிருக்கு கலெக்டராக“ (மாவட்ட ஆட்சியர்)
 அம்சமிருக்கு கழுதை மேய்க்க“ என்றொரு பழமொழி உண்டு.

ஆசைப்பட்டால் மட்டும்போதுமா?
அதற்காக உழைக்கவேண்டாமா?

இராமலிங்க வள்ளலாரின் ப-த-வி கோட்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும்.

சித்திரு - புதியன கற்கும் ஆர்வத்தோடு இரு.
னித்திரு - தனித்துவமுடையவனாக இரு.
விழித்திரு - உள்மன விழிப்போடு இரு.

என்பது நான் புரிந்துகொண்ட கருத்து. இவை மூன்றும் இருந்தாலே பதவியைத் தேடி நாம் செல்லவேண்டியதில்லை. நம்மைத் தேடிப் பதவி தானே வரும்.


தொடர்புடைய இடுகை


23 கருத்துகள்:

  1. வேண்டும்... வேண்டும்... முனைவரையா... எனக்கு நீங்கள் சொல்லியிருக்கும் பதவி அவசியம் வேண்டும். அருமையான கருத்து.

    பதிலளிநீக்கு
  2. ஒரு வாசகம் சொன்னாலும் அதையே திவாசகமாகச் சொன்னீர்கள் !..ஒரு நல்ல பதவிக்கு இந்த நற் பண்புகள் மிக மிக அவசியமே .அருமை!..
    தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  3. நல்ல இருக்கு நண்பா.

    www.amarkkalam.net

    பதிலளிநீக்கு
  4. தத்துவ வழி நீதியா! முனைவரே! பொருள் விளக்கம் பொருத்தமே!

    பதிலளிநீக்கு
  5. முற்றிலும் உண்மை. பசித்திரு விழித்திரு,தனித்திரு இவற்றை பதவி என்று சுருக்கியது அடுமை.

    பதிலளிநீக்கு
  6. இராமலிங்க வள்ளலாரின் ப-த-வி கோட்பாடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... பதவியில் உள்ளவர்கள் இந்த கோட்பாடை கடைப்பிடிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான அனைவரும் அவசியம்
    மனதில் கொள்ளவேண்டிய கருத்து
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. முக்கியமான அவசியம் உணரவேண்டி பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. அண்ணாவிற்கு அன்பு வணக்கம்
    பதவி பற்றிய இடுகை நன்று என்று சொன்னால்
    முற்று ஆகிவிடும்.
    ஆதலால், அவ்விடுகை மீது கொண்ட
    பற்று இற்று விடாத ஒன்று.
    அப்பற்றினை நான் பெற்று நன்றாக கற்றுக் கொண்டிருக்கின்றேன் என்ற பற்றினை தெரிவிப்பதில்
    என் உளம் மகிழ்கின்றது
    நன்றும் தேனாகிறது

    பதிலளிநீக்கு