வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கணக்கில்லாக் கடவுள்கள் (கலீல் சிப்ரான்)


 கிலாபிசு  மாநகரின் கோயில் கோபுரத்தின் முன் நின்று ஒரு மதவாதி – குதர்க்கவாதி – உலகில் உள்ள பல கடவுள்கள் பற்றி விக்கமாகப் பிரச்சாரம் செய்தார். அதைப் பல ஆயிரம் மக்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

பேருரை முடிந்தது. மக்கள், “எங்களுக்குத் தெரியாதா? இந்தக் கடவுள்களெல்லாம் எங்களுடன் வாழ்கின்றனர். நாங்கள் போகுமிடமெல்லாம் எங்களுடன் இக்கடவுள்கள் வருகின்றனர். என்று பேசிக்கொண்டே சென்றர்.

சில நாட்கள் கழிந்தபின் கடைத்தெருவின் சதுக்கத்திலே ஒரு நாத்திகன் மக்களிடையே சொற்பொழிவாற்றினான். “ கடவுள் ஓர் கற்பனை. மனிதன் இல்லாத கடவுளைக் கற்பனை செய்து அதற்கு இன்று அடிமையாகி அல்லல்படுகின்றான்.“ என்று கூறினான். மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆரவாரம்! ஏன் தெரியுமா? கடவுளுக்காகப் பயந்து நடுங்கவேண்டாமே!

சில மாதங்கள் ஓடின. மிகவும் திறமையான, சொல்நயம் மிளிரப் பேச்சாற்றல் மிக்க ஞானி பேசினார். “இந்த உலகில் இருப்பவர் ஒரே ஒரு கடவுள்தான். கடவுளின் தீர்ப்பு நாளில் நீங்களெல்லாம் உங்கள் செயலுக்கு விளக்கம் கூறவேண்டும். தீர்ப்பு நாளிலிருந்து தப்பமுடியாது.“ என்றார். இதைக் கேட்ட மக்களுக்கெல்லாம் ஒரே பயம். ஏற்பட்டது. அஞ்சி அஞ்சி செத்தனர். பல கடவுள்கள் என்றபோது பயப்படாதவர்கள் கூட “ஒரே கடவுள்“ என்று கேட்டபோது அஞ்சி நடுங்கினர்.

சில ஆண்டுகளில் வேறோர் அறிவாளி தோன்றினார். அவர் “உலகில் மூன்று கடவுள்கள் இருக்கின்றர். படைத்த, காத்தல், அழித்தல் இவர்கள் தொழில். இந்தக் கடவுள்கள் வானவெளியிலே வாழ்கின்றர்.” என்றார்.
அதுமட்டுமல்ல, அவர் மேலும் கூறினார். “இந்தக் கடவுள்களுக்கு கருணைக் கடலான தாய் இருக்கின்றாள். இவர்களுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்ககை, கணவன், மனைவி எல்லாம் குடும்பமாய் இருக்கிறார்கள்“ என்று புகன்றார்.
இந்த விளக்கவுரையைக் கேட்டவுடன் மக்களுக்கு மனதிலே ஒரு திருப்தி ஏற்பட்டது.

மூன்று கடவுள்கள் இருப்பதால் அவர்களுக்குள்ளே கருத்து வேற்றுமை ஏற்படும். குற்றம் குறைகள் இருக்கும். கடவுளின் தாய் கருணை மிக்கவர். அவருக்குக் கட்டாயம் நம் ஏழ்மையும் பலவீனமும் நன்றாகப் புரியும் இல்லையா? என்று திருப்தி அடைந்தனர்.

இந்நாள் வரை கிலாபிசு நகரில் மட்டுமல்ல, இந்த நாடு முழுமையும் மக்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் வாதாடுகின்றர். சொற்போர் நடத்துகின்றனர். “கடவுள்கள் பலப்பல“ என்போர் சிலர். கடவுளே இல்லை என்போர் கொஞ்சம் பேர். உலகில் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு என்கிறார்கள் சிலர். நம்மை மூன்று கடவுள்கள் வாழ்விக்கின்றார்கள் என்பார்கள் சிலர். தாய் தந்தையுடன் பிள்ளை குட்டியுடன் பெரிய குடும்பமே “கடவுள் குடும்பம்“ என்று கூறுகின்றவர்களோ மிகப் பலர்.

1 கருத்து:

  1. கணக்கில்லா கடவுள்கள் --கலீல் சிப்ரான் அவர்களின் கதை அருமை...இப்படித்தான் கடவுள்கள் தோன்றினரோ?!!! ஆம் உண்மைதான் மக்களுக்குப் பிரச்சினை இல்லையென்றால் அர்ச்சனை இல்லைதான்...நல்ல பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு