வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 6 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 130. நெஞ்சொடு புலத்தல்

 


அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே

நீஎமக்கு ஆகா தது? - 1291

என் நெஞ்சே உன்னை நினைக்காதவரையே நீ நினைப்பது ஏன்?      

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. -1292

அன்பில்லாதவரைக் கண்டும் ஏன் அவரிடம் செல்கிறாய் நெஞ்சே!    

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங்கு அவர்பின் செலல்? - 1293

கெட்டோருக்கு நட்பில்லை என்பதாலோ, நெஞ்சே அவா்பின் சென்றாய்

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று. - 1294

நெஞ்சே! ஊடலால் விளையும் கூடலை அறியாத உன்னிடம் பேசேன் 

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. - 1295

அவரைக் காணாத போதும் அச்சம்!, கண்டாலும் பிரிவெண்ணி அச்சம்  

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு. - 1296

தனிமையில் பிரிவு பற்றி நினைத்தால் என் நெஞ்சம் மேலும் வருத்தும்

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்

மாணா மடநெஞ்சிற் பட்டு. - 1297

அவரை மறக்கமுடியாததால், மறக்கக்கூடாத நாணத்தை மறந்தேன்

எள்ளின் இனிவாம்என்று எண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. - 1298

பிரிந்தாலும் அவரை இகழ்வது இழிவென்பதால் புகழ்கிறது என் நெஞ்சு

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி. - 1299

துன்பத்தில் நெஞ்சமும் துணைவராவிட்டால் யார் துணை வருவார்!   

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி. - 1300

நம் நெஞ்சமே எதிர்க்கும் போது, அயலார் எதிர்ப்பது இயல்பே          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக