வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 8 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 132. புலவி நுணுக்கம்


பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு.-1311

பல பெண்கள் உன்னைப் பார்ப்பதால் ஒழுக்கமில்லா உன்னை தழுவேன்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை

நீடுவாழ் கென்பாக் கறிந்து.1312

ஊடியபோது தும்மினார், நீடு வாழ்க என யாம் வாழ்த்துவோம் என்று 

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்

காட்டிய சூடினீர் என்று.-1313

மலர் சூடினாலும், யாருக்குக் காட்ட சூடினீர் என கோபம் கொள்வாள்   

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று. - 1314

யாவரையும் விட காதலுடையன் என்றாலும் யாரைவிட என ஊடுவாள்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்நிறை நீர்கொண் டனள். - 1315

இப்பிறவியில் பிரியேன் எனினும், அடுத்தபிறவியை எண்ணி அழுவாள்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள். -1316

உன்னை நினைத்தேன் என்றாலும், ஏன் மறந்தீர் என ஊடல்கொள்வாள்

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீர் என்று. - 1317

நினைப்பவள் நானிருக்க,யார் நினைத்து வந்தது தும்மல் என ஊடினாள் 

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்

எம்மை மறைந்திரோ என்று. - 1318

தும்மலை மறைத்தாலும், காதலியை மறைப்பதாக கோபம் கொள்வாள்

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர்

இந்நீரார் ஆகுதிர் என்று.- 1319

அவளை மகிழ்வித்தாலும், பிறரிடமும் இப்படி நடப்பீரோ என ஊடுவாள்

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும்நீர்

யாருள்ளி நோக்கினீர் என்று.-1320

அவளை ஆழ்ந்து நோக்கினும், யாருடன் ஒப்பிடுகிறீர் என சினப்பாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக