வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 7 ஜனவரி, 2021

திருக்குறள் - அதிகாரம் - 131. புலவி



புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்

அல்லல்நோய் காண்கம் சிறிது. - 1301

ஊடல் கொள்ளும்போது தழுவாமல் அவரை சிறிது துன்பம் செய்வோம்

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல். - 1302

உணவில் உப்பினைப் போல அளவுடன் ஊடல் கொள்க

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்

புலந்தாரை புல்லா விடல். - 1303

ஊடல்கொண்டு கூடாமலிருப்பது துன்பத்தை மேலும் தருவது போன்றது

ஊடி யவரை உணராமை வாடிய

வள்ளி முதலரந் தற்று. - 1304

ஊடிக் கூடாமை, வாடிய கொடியை அடியோடு அறுத்தது போன்றது

நலத்தகை நல்லவர்ககு ஏஎர் புலந்தகை

பூஅன்ன கண்ணார் அகத்து. - 1305

மலர் போன்ற கண்களையுடைய மகளிரின் ஊடலும் ஆடவர்க்கு அழகு

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று.- 1306

சிறு பிணக்கும், பெரும் பிணக்கும் இல்லாத காமம் பயனற்றது

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்று கொல் என்று.- 1307

கூடல் நீளுமா என்ற துன்பம் ஊடலில் தோன்றுவது இயல்பே    

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்

காதலர் இல்லா வழி. - 1308

நம்மீது அன்புடைய காதலர் இல்லாதபோது வருந்துவதால் பயனில்லை

நீரும் நிழலது இனிதே புலவியும்

வீழுநர் கண்ணே இனிது. - 1309

நீரும் நிழலும் போல அன்புடையோரிடம் கொள்ளும் ஊடலும் இனிது

ஊடல் உணங்க விடுவாரொடு என்நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா.- 1310

ஊடியபோது வாடவிட்டவரிடம், கூட நினைப்பது என் நெஞ்சின் ஆசை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக