வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 15 மே, 2011

இரண்டாம் தரம்.


குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள் சிறுவர்களுக்கான பாடல்களை அழகிய தமிழில் பாடியதால் புகழ்பெற்றவராவார். இவரைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.

இவர் ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரை வற்புறுத்தி சாப்பிடச் செய்தனர். கவிஞர் உணவில் சிலவற்றைத் தவிர்த்து,சிலவற்றை மட்டும் உண்ணலானார். அருகில் நின்று உபசரி்த்தவர். “ஏன் கவிஞர் சரியாகச் சாப்பிடவில்லை. சாப்பாடு நன்றாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு,

சாப்பாடு முதல் தரம்!
நான் இரண்டாம் தரம்!

என்று பதிலளி்த்தார். தான் முதலிலேயே வீட்டில் சாப்பிட்டுவிட்டேன். அதனால் இப்போது நன்றாக சாப்பிடமுடியவில்லை என்பதைக் கவிஞர் தமிழ்ச்சுவையுடன் சொன்னார்.

3 கருத்துகள்: