வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 11 பிப்ரவரி, 2021

தேன் சொட்டும் தமிழ்த்துளிகள் - செ.சிந்து (Kindle Edition)



வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

எனும் மகாகவி பாரதியாரின் வாய்மொழிக்கேற்ப, நாம் பூமியில் அறச்செயல்கள் செய்து ஒழுக்க நெறியில் வாழ்ந்திட, ‘தெய்வப் புலவரான திருவள்ளுவர்’ எழுதிய அறிவுப் பெட்டகம் திருக்குறள். அதன்மீது சிறுவயதிலிருந்து நான் கொண்ட காதலால், இந்நூலை எனது கவிதைகளால், அதிகாரத்துக்கு ஒரு கவிதை என 133 கவிதைகளை இக்கால வாழ்வியலுக்கேற்ப  எளிமையாக எழுதியுள்ளேன்.

மனிதன் மனிதனாக வாழ
மனிதன் மனிதனுக்கு கூறிய அறவுரை - திருக்குறள்’
எனும் வரிகளுக்கேற்ப, எனக்கான எளிய நடையில் இந்நூலைப் படைத்துள்ளேன்.
நிறைகள் இருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள். குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். தங்களது கருத்துகள் எதுவாக இருப்பினும் மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
-செ.சிந்து

 

மின்னூலைப் பெறுவதற்கான இணைப்பு



1 கருத்து: