வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 21 ஜூன், 2021

வறுமையும் புலமையும் - UPSC EXAM TAMIL - புறநானூறு -197

வறுமையும் புலமையும்  சேர்ந்தே இருப்பது என்று சொல்வதுண்டு.

வள்ளுவர் கூட,

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு

தெள்ளிய ராதலும் வேறு - 374

செல்வமுடையவர்களாவதும், அறிவுடையவர்களாவதும் வேறாவதே உலகத்தின் இயற்கை என்று உரைக்கிறார்.

மனிதர்கள் பலவிதம் 

அறிவுடையோர் அறிவைத் தேடுவதால் பணம் அவர்களிடம் எப்போதும் சேர்வதில்லை. 

சங்ககாலத்தில் புலவர்களும் கலைஞர்களும் வள்ளல்களை நாடிச் சென்று பரிசில் பெற்று வருவது மரபாக இருந்தது.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் வழங்காமல் காலம் தாழ்த்தினான். அப்போது,  கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர் பாடியதாக இப்பாடல் அமைகிறது.

சனி, 19 ஜூன், 2021

சிறக்க நின் நாளே - UPSC EXAM TAMIL - புறநானூறு -196

நன்மை செய்தவர்களை வாழ்த்துவதும்

தீமை செய்தவர்களைப் பழிப்பதும் உலக மரபு.

இப்புறப்பாடலில் பாண்டியன் புலவருக்குப் பரிசில் தருவதற்குக் காலம் கடத்திவந்தான். இது முறையன்று என்று புலவர் ஆவூர் மூலங் கிழார்  எடுத்துரைத்து வாழ்த்துகிறார். 

பரிசில் தராமல் காலம் தாழ்த்தியது தமக்கு ஏமாற்றமாக இருந்தாலும். ஏமாற்றுவது பெருங்குற்றமல்லவா, அதனால் அவனும் அவன் குடும்பமும் பாதிக்கப்படக் கூடாது என்று வாழ்த்துகிறார் புலவர்.

பாடல்,

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே  5

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ் குறைபடூஉம் வாயில் அத்தை;

அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்

சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,

நோய் இலராக நின் புதல்வர்; யானும்,  10

வெயில் என முனியேன், பனி என மடியேன்,

கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,

நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்

மெல் இயல் குறு மகள் உள்ளிச்

செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே! 15

புறநானூறு - 196

திணை பாடாண் திணை; 

துறை பரிசில் கடா நிலை.

பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.

வெள்ளி, 18 ஜூன், 2021

சங்க இலக்கியப் பொன்மொழிகள் - ஆங்கில விளக்கத்துடன் - மின்னூல்

 


சங்கஇலக்கியங்களில் கூறப்பட்டுள்ள அரிய சிந்தனைகள் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்படவேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டால் தமிழின் செம்மைத்தன்மை உலகத்துக்கே விளங்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் சங்க இலக்கியத்திலிருந்து தேர்ந்தெடுத்த 50 பாடலடிகள் ஆங்கில விளக்கத்துடன் உரைக்கப்பட்டுள்ளன.






செவ்வாய், 15 ஜூன், 2021

இல்லறமா? துறவறமா? - UPSC EXAM TAMIL - புறநானூறு -193

            புதிதாகத் திருமணமான மணமக்கள் கோயிலுக்குச் சென்று வந்தனர். வருகின்ற வழியில் ஒரு துறவியைப் பார்த்தனர். 
அந்த மணப்பெண் தன் கணவனிடம் நாம் சென்று அந்தத் துறவியிடம் ஆசிர்வாதம் வாங்கி வரலாம் என்றாள். அவரும் சரி என்று சொல்லி, இருவரும் துறவியைச் சந்தித்து அவர் காலில் விழுந்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா எனக் கேட்டுக்கொண்டனர். 

பதறிப்போன துறவியோ எழுந்திருங்கள் எழுந்திருங்கள் என் காலில் ஏன் விழுந்தீர்கள் எனக் கேட்டார். அந்த மணமகன் சொன்னார், ஐயா நாங்கள் புதிதாகத் திருமணமானவர்கள் நீங்கள் துறவி. நீங்கள் ஆசி வழங்கினால் எம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றே தங்கள் காலில் விழுந்தோம் என்றார். அதைக் கேட்ட துறவி அந்த மணமக்கள் காலில் விழுந்தார். 

சனி, 5 ஜூன், 2021

கணினியும் தமிழும் - ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வு அழைப்பிதழ்



 சிவகாசி இராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் நிகழும் ஆசிரியர் திறன்மேம்பாட்டு நிகழ்வில் பங்குபெற அன்புடன் அழைக்கிறேன்.

வியாழன், 3 ஜூன், 2021

இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான தமிழ்ப் பாடத்திட்டம் - UPSC - Tamil Optional

 இந்திய குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பாடங்களுள் ஒன்றான தமிழ் குறித்த விளக்கங்களை இந்த தளத்திலும் எனது யூடியூப் பக்கத்திலும் தொடர்ந்து வழங்கவுள்ளேன். அதன் தொடக்கமாக தமிழ்ப் பாடத்திட்டத்தை இன்று வழங்கியுள்ளேன்.

  


இந்தியக் குடிமைப் பணித்தேர்வு

(Union Public Service Commission) 

CIVIL SERVICES MAIN EXAMINATION

தமிழ் விருப்பப்பாடம்

பாடத்திட்டம்

தமிழ் இலக்கியம் - 

தாள் - I

பகுதி -1: தமிழ்மொழி வரலாறு

∙  முதன்மை இந்திய மொழிக் குடும்பங்கள்

பொதுவாக இந்திய மொழிகளிலும் குறிப்பாகத் திராவிட மொழிகளிலும்  தமிழ்மொழி பெறுமிடம்

திராவிட மொழிகளின் கணக்கீடும் வகைப்பாடும்

ங்க இலக்கிய மொழி

இடைக்காலத் தமிழ்: பல்லவர்காலம் மட்டும்

வரலாற்று முறை ஆய்வு: தமிழில் பெயர்கள், வினைகள், பெயரடைகள்வினையுரிச்சொற்கள், காலங்காட்டும் உருபுகள், வேற்றுமை உருபுகள்.

பிறமொழிகளிலிருந்து தமிழுக்குக் கடன் வாங்கப்பட்ட சொற்கள்

∙ வட்டார, சமுதாயக் கிளை மொழிகள்

எழுத்து மொழி, பேச்சு மொழிக்கிடையே உள்ள வேறுபாடுகள்.