மின்னணுவியல் அல்லது எண்முறைப் பதிப்பே மின்னூல் ஆகும். மின்னணுவியல், எண்முறை ஊடகங்கள் மூலம் மின்னூல்களை உலகளாவிய மக்களிடம் கொண்டு சேர்க்கமுடியும். இலவசமாகக் கூட மின்னூல்களை உருவாக்கி அதன் வழி வருமானம் பெறவும் இயலும். தமிழ் மின்னூலகங்கள் குறித்த அறிமுகத்துடன் தமிழ் மின்னூல்களை உருவாக்கும் வழிமுறைகளையும் இக்கட்டுரை வழியாகக் காண்போம்.
பக்கங்கள்
- முகப்பு
- என்னைப் பற்றி
- கல்விப் பணி
- வேர்களைத்தேடி பதிப்பகம்
- நூல்கள்
- சிறப்புரைகள்
- வானொலி உரை - சான்றோர் சிந்தனை
- குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - UPSC - Tamil Optional
- திருக்குறள் உரையாடி
- திருக்குறள் ஒரு வரி உரை
- திருக்குறள் தொடரடைவும் விரிதரவும்
- திருக்குறள் சொற்பொருள் அகராதி
- Privacy Policy
- Disclaimer
- ABOUT US
- CONTACT US
சனி, 10 ஆகஸ்ட், 2024
தமிழில் மின்னூல் உருவாக்கும் வழிமுறைகள்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
சனி, 6 ஜூலை, 2024
பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - ப.ஜீவானந்தம்
பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை
என்ற இவரது கவிதைக்குச் செல்லும் முன், வள்ளுவர்,
பாரதியார், வள்ளலார், திருமூலர்
ஆகியோரின் சிந்தனைகளை ஒப்புநோக்கிய பின் செல்வோம்
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராதியல்வது நாடு
பசி, நோய்,
பகை இல்லாததே நாடு
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான்
பிச்சைக்காரர் வாழும் நாட்டைப் படைத்தவன், கெட்டு ஒழியட்டும் என்று
சினம் கொண்டார் திருவள்ளுவர்.
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
என்றார் மகாகவி பாரதி.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் இராமலிங்க வள்ளலார்.
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே
தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளைக்
காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால்
நடமாடும் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும்
என்று திருமூலர் கூறுவார்..
ப.ஜீவானந்தம் அவர்களின் கவிதைக்குச் செல்வோம்
பச்சைக் குழந்தைக்குப் பாலுமில்லை - அதன்
பட்டினி அழுகை கேட்டதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே கல்லில்
இட்டு வணங்குகிறார் முக்திக் கென்றே.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
புதன், 26 ஜூன், 2024
சிலப்பதிகாரம் - காட்சிக் காதை விளக்கம்
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வெள்ளி, 7 ஜூன், 2024
திருக்குறளில் தலைமைப் பண்புகள் - Leadership Qualities in Thirukkural - (1600 வது பதிவு)
(தமிழ் இலக்கியம், கணினித் தமிழ் சார்ந்து 16வது ஆண்டாக தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமளித்து வரும் பார்வையளார்களான உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். )
தலைமைப் பண்புள்ளவர்களால் பதவி பெருமை பெறுகிறது.
தலைமைப் பண்பில்லாதவர்கள் அந்தப் பதவியால் பெருமை பெறுகிறார்கள்.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற மூன்று பண்புகளும் தலைமைப்
பதவிக்கான நற்தகுதிகளாகக் கருதலாம். திருக்குறளில் திருவள்ளுவர் தலைமைப் பண்பு பற்றிய
பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்துள்ளார். நவில்தொறும் நூல் நயம் என்று அவர் சொல்லுவதுபோல
திருக்குறளில் தலைமைப் பண்பு என்று தேடினால் தேடுவோர் அறிவுக்கேற்ப பல குறள்களை இனம்காண
முடியும்.
திருவள்ளுவர் காலத்தில் தலைமை என்றால் அரச பதவியே இருந்திருக்கவேண்டும்.
இறைமாட்சி என்ற அதிகாரத்தில் அரசனின் பெருமைகளை எடுத்துரைத்துள்ளார். அரசனுக்கு அடுத்து
அமைச்சர்களின் பெருமைகளை உரைத்துள்ளார். அரசனும் அமைச்சரும் மட்டும் தான் தலைமைப் பண்புக்குரியவர்களா…
என்று சிந்தித்தால் அவர்கள் மட்டுமில்லை.. ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் தலைமைப் பண்பு
உள்ளது ஆனால் அதைப் பலரும் உணர்வதில்லை. உணர்பவர்கள் யாவரும் தலைவரகலாம் என்பது புரியும்.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
வியாழன், 23 மே, 2024
புறங்கூறாமை
நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..
அவர்களோடு நம்மை
ஒப்பிட்டுக்கொள்கிறோம்..அந்த ஒப்பீடு சிலருக்கு
முன்னேறவேண்டும் என்று தன்னம்பிக்கையைத் தருகிறது. சிலருக்கு பொறாமையை
ஏற்படுத்துகிறது.
அவர் இல்லாதபோது அவரது நிறைகளை
மட்டுமே பேசவேண்டும்..
மாறாக ஒருவர் இல்லாதபோது குறைகளையும, இருக்கும்போது நிறைகளையும் பேசுவது பலரின் வழக்கமாக மாறிவருகிறது.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14
திங்கள், 20 மே, 2024
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..
வினை விதைத்தவன் வினை அறுப்பான்,
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
எதை
விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்..
பிறர்க்கின்னா
முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல்
தாமே வரும்.- 319
பிறர்க்கு முற்பகல் செய்யும் தீமை, நமக்கு
பிற்பகல் தாமே வரும்
என்பது வள்ளுவர் வாக்கு.
முனைவா் இரா.குணசீலன்
தமிழ் இணைப்பேராசிரியர்
பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் -14

