வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 24 மார்ச், 2010

எதிர்பாராத பதில்கள்.




எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை. இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் யாரும் இருப்பதில்லை.

“எதிர்பார்ப்பு குறையும் போது ஏமாற்றமும் குறையும்“

வாழ்க்கையில் எதிர்பாராத பதில்கள் பல நம்மை நீண்ட நேரம் சிந்திக்கச் செய்துவிடும். அப்படிப்பட்ட எதிர்பாராத பதில்களைத் தொகுத்து தொடந்து இடுகையாகத் தரலாம் என எண்ணுகிறேன்.


-oOo-


காட்சி -1


அப்பா - உனக்கே எழுதப்படிக்கத் தெரியாது என்ன எழுதிக்கிட்டிருக்க? யாருக்கு எழுதுற?

பையன் - என் நண்பனுக்கு கடிதம் எழுதுறேன்.

அப்பா - நீ எழுதும் கடிதம் அவனுக்குப் புரியுமா?

பையன் - ஏன் புரியாது? அவனுக்கும் என்னை மாதிரி எழுதப்படிக்கத் தெரியாது! அதனால் நான் எழுதுவது அவனுக்குப் புரியும்!!

அப்பா - !!


-oOo-

காட்சி -2


அப்பா - தம்பி இங்க வா! சாமிகும்பிடாமப் போலாமா?
வா சாமி கும்பிட்டுப் போ!

பையன் - ஏம்பா சாமி கும்பிடனும்?

அப்பா - சாமி கும்பிட்டா, சாமி எல்லாம் தரும் பா.

பையன் - அப்படின்னா சாமி பேனால்லாம் தருமா?

அப்பா - ஓ பேனா என்ன? நீ என்ன கேட்டாலும் தரும்!

பையன் - சரி நீங்க உங்க பேனாவை எனக்குக் கொடுங்க.

நீங்க சாமிட்ட கேட்டு வேற பேனா வாங்கிக்கோங்க!!

அப்பா - !!!!

-oOo-

காட்சி -3


பெரியவர் - ஏம்பா தம்பிகளா..
ஓணானை ஏன் கழுத்துல கயிறைக் கட்டி இந்தப்பாடு படுத்தறீங்க? அந்த வாயில்லா சீவனைப் பார்த்தா உங்களுக்குப் பாவமா இல்லையா?

சிறுவர்கள் - இல்லையே நாங்க விளையாட்டுக்குத் தானே செய்யுறோம்.

பெரியவர் - உங்களுக்கு விளையாட்டாத் தெரியலாம். ஆனா அதுக்கு இது துன்பமி்ல்லையா? நீங்க இப்படி செஞ்சீங்கன்னா, அடுத்த பிறவியில அந்த ஓணான் மனிதனாப் பொறந்து நீங்க ஓணானா பிறப்பீங்க. அப்ப அந்த ஓணான் உங்கள இப்படி பாடாப் படுத்தும்.

சிறுவர்கள் - பெரியவரே நீங்க சொல்வது ரொம்ப சரி. போன பிறவில நாங்க ஓணானா பிறந்தப்ப இந்த ஓணான் எங்களை இப்படி துன்பம் செய்தது அதனால் தான் அதுக்கு நாங்க இப்ப பலி வாங்கிக்கிட்டு இருக்கோம்.

பெரியவர் - !!

-oOo-

காட்சி -4


தாத்தா - பாப்பா இங்க பாரு இந்த விளக்கில் ஒளியேற்றுகிறேன். இப்போது இந்த விளக்கில் ஒளி எங்கிருந்து வந்தது?

குழந்தை - (அந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு.) இப்போது இந்த ஒளி எங்கு போனதோ அங்கிருந்து தான் வந்தது.

தாத்தா - !!

-oOo-

46 கருத்துகள்:

  1. :)).ஆஹா! கலக்கீட்டாங்க வாண்டுங்க:))

    பதிலளிநீக்கு
  2. தாத்தாவுக்கு, குழந்தை சொன்ன பதில் ஹா.........ஹா..........

    பதிலளிநீக்கு
  3. ஆகா உங்களுக்குள்ளேயும் இது ஒளிஞ்சுக்கிட்டு இருந்ததா... ரசித்தேன் கடைசி - முதலில். தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. கடைசியா தாத்தாவுக்கு கிடைத்த பதிலை எதிர்ப்பார்க்கவேயில்லை.... நல்லாருக்குங்க....

    பதிலளிநீக்கு
  5. முதல் முறையாய் குணா பதிவில் ஒரு வித்தியாசமான பதிவு... நல்லா சிரிச்சேன் குணா....

    பதிலளிநீக்கு
  6. இந்த தொடர் பதிவு - சிரிப்பு சரவெடி.

    பதிலளிநீக்கு
  7. @றமேஸ்-Ramesh

    மகிழ்ச்சி றமேஸ்.

    இலக்கிய இடுகைகளுக்கிடையே இளைப்பாற!!
    இப்படியொரு இடுகை!

    பதிலளிநீக்கு
  8. @வால்பையன்

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. முனைவர் ஐயா....எதிர்பாராத பதில்கள் கேட்கும் போது நமக்கே...வாயடைத்து போய்விடுகிறது....உதாராணம் கடவுள் கிட்ட பேனா வாங்குற ... மேட்டர்...! நகைச்சுவையான பதிவு, வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. நல்ல கற்பனை.. கலக்கிட்டீங்க

    பதிலளிநீக்கு
  11. முனைவரே அருமையான அங்கதம் கை வருகிறது உங்களுக்கு

    தொடர்ந்து இளைப்பாற்றிக் கொள்ளும் வகை குளிர்தருவான இடுகைகள் பொழிக

    பதிலளிநீக்கு
  12. சூப்பர் கலக்கல் தொடருங்க நண்பரே

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் அருமை..ஆனாலும் அந்த இரண்டாவது மிக அருமை...

    பதிலளிநீக்கு
  14. சிந்தனையின் செயல் வடிவமும், அதனைப் புகைப் படத்தோடு பொருத்திப் பதிவேற்றியமையும் அருமை நண்பா..




    பதில்களும் கேள்விகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. பிந்திய பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  15. தாத்தாவுக்கு, குழந்தை சொன்ன பதில் ஹா.........ஹா..........

    பதிலளிநீக்கு
  16. @நேசமித்ரன் மகிழ்ச்சி ..
    வருகைக்கும் கருத்துரைக்கும நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  17. @பழமைபேசி

    வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி நண்பரே..

    பதிலளிநீக்கு
  18. சிந்திக்க வைக்கும் சிரிப்பு,மன மகிழ்வு, வாழ வைக்கும் வைத்யம்,அப்பப்பா! அன்பாக நீர் ஓர் கில்லாடி !

    பதிலளிநீக்கு