வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

சிரிப்பும் சிந்தனையும்.


விலங்குக் காட்சிச் சாலையில் புலியொன்று ஒரு மனிதனைக் கொன்றுவிட்டது.
புலியிடம் சென்று குரங்கு...

ஏன் அந்த அப்பாவி மனிதனைக் கொன்றாய் ? என்று கேட்டது.

அதற்குப் புலி சொன்னது...

3 மணி நேரம் என்னைப் பார்த்துவிட்டு அந்த மனிதன் சொன்னான்.....

“எவ்வளவு பெரிய பூனை“ என்று …

அதனால் தான் எனக்குக் கோபம் வந்துவிட்டது.

--------------------------------------------------------------------------------
உலகில் மனிதர்களை மூவகைப்படுத்தலாம்.
ஒன்று - மாறாதவர்கள்,
இரண்டு - மாறுபவர்கள்,
மூன்று - மாற்றுபவர்கள். ( அரேபியப் பழமொழி)

--------------------------------------------------------------------------------

சராசரி மனிதன் புத்தகத்தோடு இருப்பான்!
சாதனை மனதன் புத்தகத்தில் இருப்பான்!

-------------------------------------------------------------------------------
மனம் திறந்து பேசுங்கள்!
ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள்!
சிலர் புரிந்து கொள்வார்கள்!
சிலர் பிரிந்து செல்வார்கள்!

-----------------------------------------------------------------------------
மகிழ்ச்சி இருக்குமிடத்தில் நீங்கள் வாழ விரும்புவதைவிட
நீங்கள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை இனிமையுடையதாக இருக்கும்!
----------------------------------------------------------------------------

ஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..
தான் தவறு செய்யும் போதும்,
செய்த தவறை மறைக்கும் போதும்!
---------------------------------------------------------------------------

10 கருத்துகள்:

  1. மிக சிறப்பான முத்தான பகிர்தல் .. நன்றி

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான சிந்திக்கவைக்கும் பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  3. அருமையான கருத்துக்கள். நன்றி!!!

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்துக்கள். நன்றி!!!

    பதிலளிநீக்கு
  5. ஆமா எதுக்கு பூன படம் போட்டுருக்கிங்க?

    பதிலளிநீக்கு
  6. //ஒவ்வொரு மனிதனும் கண் பார்வையற்றவனாகிறான்..
    தான் தவறு செய்யும் போதும்,
    செய்த தவறை மறைக்கும் போதும்!//

    பளிச்சென்று உண்மையை போட்டுடைக்கும் வரிகள். நல்ல தொகுப்பு :)

    பதிலளிநீக்கு