வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 30 மார்ச், 2012

ஏமாந்த குரங்கு


ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்பழம் என்று எண்ணித் தட்டியது. அவ்வோசைக்கு மாறாக அமமரத்தில் வாழும் அன்னச் சேவல் பறந்து ஒலியெழுப்பியது.

இத்தகைய வளமுடையது ஆய் அண்டிரனின் பொதிய மலை, இம்மலைக்கு ஆடுமகள் (விறலி) செல்லாமேயன்றி, போரை விரும்பும் பகைவர் செல்லமுடியாது என்று மன்னனின் வீரத்தை இயற்கையோடு இயைபுபடுத்திப் பாடுகிறார் முடமோசியார். பாடல் இதோ,

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்;
ஆடு மகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

புறநானூறு 128.
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.

ஆங்கில மொழிபெயர்ப்பு

The  monkey beat
on the tight drum with clear eyes
hung on a jackfruit tree’s big branch
by the drummers who came for alms,
thinking that it was a jackfruit.
A male swan danced to that beat
in Āy’s land where clouds float on Pothi hills.
Āy with warrior’s bracelets and anklets
is easier to approach by a dancing girl
than by mighty kings.        

தொடர்புடைய இடுகை

17 கருத்துகள்:

  1. இந்த பாடலை எப்போதோ பள்ளியில் படித்ததாக நினைவு. மறுபடியும் ஞாபகபடுத்தி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  2. புறநானூற்றுப்பாடல் பகிர்வு அருமை

    பதிலளிநீக்கு
  3. புறநானூறு பாடல் விளக்கமும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் அருஞ்சுவை.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பாடல்

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
    ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

    பதிலளிநீக்கு
  5. manthi !
    kurangain marumperai therinthath
    makizhchi!

    ungalukkum nantri!

    பதிலளிநீக்கு
  6. என்ன ஒரு அழகான கற்பனை வளம்..
    அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல
    முனைவரே.

    பதிலளிநீக்கு
  7. feedburner-ல் 200-க்கும் மேற்பட்ட வாசகர்களை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சார் ..!

    பதிலளிநீக்கு
  8. தமிழை ஆய்ந்து படித்தால் தான் இதனுடைய கருத்து தெளிவாஜகப்புரியும்

    பதிலளிநீக்கு