வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 21 ஜூலை, 2013

தமிழ் வளர்க்கும் சீனர்கள்


                   தமிழகத்தில் ஒலிபரப்பாகும் வானொலிகளில் கூட பிறமொழி கலவாத அழகியதமிழில் நிகழ்ச்சிகளைக் கேட்கமுடிவதில்லை. நம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களெல்லாம் ஏதோ காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோலவும், விமானத்தைப் பிடிக்கக் கிளம்புபவர்கள் போலவும் அவசர அவசரமாக தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சீனாவிலிருந்து ஒளிபரப்பாகும் சீன வானொலி அழகிய தமிழில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது என்ற செய்தியைக் கேட்க்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது. இந்தத் தொகுப்பாளர்கள் தம் பெயர்களையும் அழகிய தமிழில் மாற்றிககொண்டனர் என்ற செய்தி மேலும் வியப்பளிப்பதாகவுள்ளது.

9 கருத்துகள்:

  1. ஒரு விதத்தில் சந்தோசப்படும் தகவல்... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. மகிழ்ச்சியான தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான் மலேசியாவில் வாழும் சீனர்கள் கூட தமிழ் பேசி நான் பார்த்து இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. முற்றத்துப் பூண்டு மணக்காது என்று இதை வைத்துத் தான் சொன்னார்களோ ......!!!!!!
    அருமையான பகிர்வு வாழ்க சீனர்களும் எம் தமிழும் !!... .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  5. என்னால் ஒரே ஒரு விருப்ப வாக்குத்தான் இட முடிந்தது .இதற்க்கு 100 விருப்ப
    வாக்குகள் இடலாம் .மீண்டும் மீண்டும் எனது நன்றிகள் .

    பதிலளிநீக்கு
  6. மன மகிழ்வு தரும் தகவல்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. சந்தோஷமான தகவல் என்றாலும் நம் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஆங்கிலத்தில்தான் அதிகம் பேசுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது...

    சீனத் தமிழர்களை வாழ்த்துவோம்.... (h)


    பதிலளிநீக்கு
  8. மகிழ்ச்சியான செய்தி. அங்கேயாவது தமிழ் போற்றப்படுகிறதே.....

    பதிலளிநீக்கு
  9. "நம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களெல்லாம் ஏதோ காலில் சுடுதண்ணீர் ஊற்றியதுபோலவும், விமானத்தைப் பிடிக்கக் கிளம்புபவர்கள் போலவும் அவசர அவசரமாக தமிங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சீனாவிலிருந்து ஒளிபரப்பாகும் சீன வானொலி அழகிய தமிழில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருகிறது என்ற செய்தியைக் கேட்க்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது"

    எதிர்காலத்தில் சீனாவும் இந்தியாவும் இணைந்த ஒரே நாடு உருவாக வாய்ப்பு உள்ளது. அப்போது ஆட்சி மொழியாக இந்தி இருக்காது. சீனாவும் தமிழும்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு