வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 23 மார்ச், 2017

தொப்பிக்காரன் கதை


ஒரு தொப்பிக்காரன் ஊர் ஊராய் தொப்பி விற்று வந்தான். ஒருநாள் மதிய உணவு உண்பதற்காக ஒரு மரத்தின் நிழலில் தங்கினான். உண்ட மயக்கத்தில் தூங்கிவிட்டான். எழுந்து பார்த்தால், அவனுடைய தொப்பிகளை அந்த மரத்திலிருந்த குரங்குகள் வைத்து விளையாடிக்கொண்டிருந்தன. சிந்தித்த அந்தத் தொப்பிக்காரன் தன் அப்பா தந்துசென்ற நாட்குறிப்பேட்டை எடுத்துப் படித்துப்பார்த்தான். அதில் அவனுடைய அப்பா சொல்லியிருந்தார், குரங்குகள் நாம் செய்வதை அப்படியே செய்யும். நீ உன் தலையில் தொப்பியை மாட்டி அதை எடுத்து கீழே போட்டால் அவையும் போடும். நீ எடுத்துவந்துவிடலாம் என்று எழுதியிருந்தது. அவ்வாறே அவனும் செய்தான். ஆனால் அந்த மரத்திலிருந்து இறங்கிவந்த ஒரு குட்டிக்குரங்கு அவன்போட்ட அந்தத் தொப்பியையும் எடுத்துச் சென்றுவிட்டது. ஏமாந்த அந்தத் தொப்பிக்காரன் மரத்தின் மேல் பார்த்தான். குரங்குகள் கைகளில் திறன்பேசி இருப்பதை அறிந்து அதிர்ந்துபோனான். ஆம் அக்குரங்குகள் முகநூலில் அரட்டையடித்துக்கொண்டிருந்தன. அப்போது அவனுக்குப் புரிந்தது. என் அப்பா கொடுத்த நேற்றைய நாட்குறிப்பு என்கையில், ஆனால் இந்தக் குரங்குகள் கையில் இன்றைய தொழில்நுட்பம்! என்று அவன் வியந்துபோனான்.
இந்தக்கதை உணர்த்தும் நீதி!
காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப அறிவுடன் வாழவேண்டும். இல்லாவிட்டால் ஏமாந்துபோவோம்! என்பதுதான்.

இந்தக் கதைக்கும் தொப்பி சின்னத்துக்கும் ஆர்.கே நகர் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக