வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

சங்க இலக்கியம் செவ்வியல் பார்வை.

முனைவர்.ச.அகத்தியலிங்கம்
(தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், உலக அளவில் மொழியியல்
துறையில் புகழ்பெற்றவர்)

தமிழ்மொழியின் செம்மொழிப் பண்புகள் பிற செம்மையான மொழிகளைக் காட்டிலும் தனித்தன்மை வாய்ந்தது.அதனை உலகோர் அறிய சங்க இலக்கியத்தில் உள்ள செம்மைப் பண்புகளை எடுத்தியம்புவதாகவும் பிற உயரிய மொழிகளோடு ஒப்பிட்டு நோக்குவதாகவும் இந்நூல் விளங்குகிறது.
தமிழ் மொழி தொன்மையானது, தனிச் சிறப்புடையது, என்று கூறிக்கொண்டிருப்போர் நடுவே தமிழின் சிறப்புகளை எடுத்தியம்பும் சிறந்த நூலாக இந்நூல் விளங்குகிறது.

இந்நூலின் உள்ளடக்கம்

சங்க இலக்கயம் செவ்வியல் பார்வை
உடன்போக்கு புதிய பார்வை
அவாய் நிலை வாக்கியங்களும் கவிதை உருவாக்கமும்
ஒளவையாரின் கவிதைகள்
எண்ணல் நிலை வாக்கியங்களும் கவிதை உருவாக்கமும்

என்பதாகும்
நூல் கிடைக்குமிடம்

மணிவாசகர் நூலகம்
12.பி.மேல சன்னதி, சிதம்பரம்
நூல் வெளியான ஆண்டு – 2004.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக