வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

நம் கருத்துக்கள் எங்கெல்லாம் உள்ளன...


இன்றைய இணையதள வளர்ச்சியில் இணையதள தகவல் திருட்டு என்பது எளிதாக நடைபெறும் ஒன்றாகிவிட்டது. நம் இணையதளத்திலோ, வலைப்பதிவிலோ நாம் வெளியிட்ட தகவல்களை நம் அனுமதியின்றி எடுத்து தங்களுடைய கருத்துக்களைப் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். மேலும் நம் அனுமதியின்றி பல இணையதளங்கள் நம் கட்டுரைகளை எடுத்து வெளியிடுகின்றன. சென்ற மாதம் கூட என் அனுமதியின்றி கொழும்பிலிருந்து வெளியாகும் தினகரன் என்னும் நாளிதழ் என் கட்டுரையை வெளியிட்டிருந்தது.ஆயினும் கட்டுரையின் கீழே நன்றி முனைவர்.இரா.குணசீலன் என்று குறிப்பிட்டிருந்தது.
இத்தகைய நாகரிகங்களைக் கூடக் கடைபிடிக்காமல் பலர் கருத்துக்களை பயன்படுத்தி வருகின்றனர். அதனை நாம் அறியும் போது நமக்கு வருத்தமாக இருக்கும். நம் வருத்தத்தைப் புரிந்து கொண்டு (http://copyscape.com//" ),இத்தளம் செயல்படுகிறது. இத்தளத்துக்குச் சென்று நம் இணையதள முகவரியையோ, வலைப்பதிவு முகவரியையோ அளித்தால் சில நொடிகளில் நம் பதிவு எந்தெந்த வலைப்பதிவுகளில், இணையதளங்களில் எடுத்தாளப்பட்டுள்ளது என்ற விபரங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

2 கருத்துகள்: