வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 1 ஏப்ரல், 2009

கல்பொரு சிறுநுரையார்


காமம் தாங்குமதி என்போர் தாம் அஃது
அறியலர் கொல்லோ? அமை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம் ஆயின்
செறிதுனி பெருகிய நெஞ்சமோடு பெருநீர்க்
கல்பொரு சிறு நுரை போல
மெல்ல மெல்ல இல்லாகுதுமே“

(குறுந்தொகை- 290)


வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி அழிவுற்றுச் சொல்லியது.

தலைவி தலைவனின் பிரிவால் ஆற்றாமை மேலிட்டு தவிக்கிறாள்.தோழி வந்து நின் காமநோயைப் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்கிறாள். அதற்குத் தலைவி, அறிவுரை சொல்பவர்கள் காமத்தின் தன்மையையோ, அதனைப் பொறுத்துக்கொள்ளும் வலிமையும் உடையவரோ? என வினவுகிறாள்.

தன் நிலையைக் கல்லில் மோதி காணாமல்ப் போகும் கடலின் சிறுநுரையோடு ஒப்பிட்டு உரைக்கிறாள் தலைவி. கடலின் அலையில் தோன்றும் சிறு நுரை எவ்வாறு காணாமல்ப் போகுமோ அதுபோல தன் உயிரும் அழிந்துபடும் எனத் தன்னிலையை உரைக்கிறாள்.
இப்பாடலில் வெள்ளம் காமமாகவும், கல் பிரிவாகவும், சிறுநுரை தலைவியின் உயிராகவும். உவமம் கொள்ளப்பட்டதுஇவ்வுவமையின் சிறப்புக்கருதி இப்புலவர்
கல்பொரு சிறுநுரையார் என்னும் பெயர் பெற்றார்.

1 கருத்து:

  1. your blogspot is awesome... இப்போ தான் வந்திருக்கேன். இன்னும் நெறையப் படிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு