வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

தமிழர் உணவு

நூலாசிரியர் சே.நமசிவாயம்

மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது உணவு. பழங்கால மனிதன் விலங்குகள் போல கிடைத்த உணவுகளை உண்டு வாழ்ந்தான்.பின் பதப்படுத்திய உணவுகளை உண்டான்.உணவின் பல்வேறு சுவைகளையும் அறிந்து தன் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிக்கவும் கற்றுக்கொண்டான். சங்க காலம் என்பது இனக்குழு வாழ்வு நிலவுடைமைச் சமூக வாழ்வு என்னும் இரு வாழ்க்கைமுறைகளின் இணைப்புப்பாலமாகும். இக்காலத்தில் எழுந்த சங்க இலக்கியங்களின் வாயிலாக பெறப்படும் செய்திகள் அக்கால மக்களின் வாழ்வியலாக அறியமுடிகிறது.அந்த அடிப்படையில் சங்க கால மக்களின் வாழ்வியலில் உணவு பெறுமிடத்தை நமக்கு எடுத்தியம்பும நூலாக “தமிழர் உணவு ” என்னும் நூல் விளங்குகிறது.

இந்நூலின் உள்ளடக்கம்

நில அடிப்படை
கல்வெட்டுச் செய்திகள்
நிகண்டுச் செய்திகள்
சுவையடிப்படை
திடவுணவு
நீருணவு
உண்ணும் முறை
உணவும் பண்பாடும்
உணவும் தமிழ்ச் சமுதாயமும்


என அமைந்துள்ளது.

இந்நூலின் வாயிலாக சங்க காலமக்களின் வாழ்வியலில் உணவு பெறுமிடத்தை தமிழர் பண்பாட்டுக் கூறுகளுடன் அறிந்துகொள்ள முடிகிறது.
நூல் கிடைக்குமிடம்

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
அடையாறு சென்னை
நூல் வெளியான ஆண்டு-1981.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக