வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

இது மனிதக்காதல் அல்ல!!


விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்
வானக் காதலன்
பூமிப்பெண்ணுக்குத் தரும்
முத்தங்களே – மழைத்துளிகள்!

-00o00- -00o00- -00o00- -00o00-

நட்சத்திரக் காதல்

நிலாப் பெண்ணுக்குக்
காதல் கடிதம்தரக் காத்திருக்கும்
காளையர்களே – நட்சத்திரங்கள்!

-00o00- -00o00- -00o00- -00o00-

அலைக் காதல்

அலை வந்து பலமுறை சொல்லியும்
காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
கடலோரத்துக் கரை!

-00o00- -00o00- -00o00- -00o00-

காற்றுக் காதல்

அழுதுபுலம்பும் தென்றலைக் காண
பொருள் தேடி விரைந்தான்
புயல்க் காதலன்!
-00o00- -00o00- -00o00- -00o00-

கவிதைக் காதல்

உண்மை பொய் எனஇருவரும்தான்
கவிதைப் பெண்ணைக் காதலித்தனர்
கவிப்பெண் ஏனோ எப்போதும்
பொய்யை மட்டுமே காதலிக்கிறாள்!!
-00o00- -00o00- -00o00- -00o00-

மனிதக் காதல்

ஆண்களும் பெண்களும்
பணத்தையே காதலிக்கின்றனர்
பணம் ஏனோ உண்டியலைத்தான்
திருமணம் செய்துகொள்கிறது!

-00o00- -00o00- -00o00- -00o00-

33 கருத்துகள்:

  1. ஆண்களும் பெண்களும்
    பணத்தையே காதலிக்கின்றனர்
    பணம் ஏனோ உண்டியலைத்தான்
    திருமணம் செய்துகொள்கிறது!

    அனைத்தும் அருமை ,இருந்தாலும் இந்த வரிகள் நச்

    தமிழ் மணம் voted

    பதிலளிநீக்கு
  2. எனது பதிவில் தங்களது தளத்திற்கு லிங்க் கொடுத்துள்ளேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. //அலை வந்து பலமுறை சொல்லியும்
    காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
    கடலோரத்துக் கரை!//அருமை வரிகள் ..

    பதிலளிநீக்கு
  4. காதல்தான் எத்தனை வகை
    மிக உச்சத்தில் வானத்தில் துவங்கி
    உண்டியல் வரை..
    அருமையான கற்பனை
    அழகான படைப்பு
    வாழ்த்துக்கள் த.ம 5

    பதிலளிநீக்கு
  5. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. காதலுக்கு பொய் அழகு என்பதுபோல இந்த கவிதைப்பெண்ணுக்கும் பொய் அழகாக தெரிகிறாரோ? அதனால் தான் கவிதைப்பெண் பொய்ய்யை காதலிக்கிறாள்ன்னு நினைக்கிறேன். அனைத்துக் கவிதைகளுமே அருமை.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கவிதை .அப்பா இவ்வளவு காதல் இருக்கா.
    அப்புறம் இதுதான் உங்கள் தளத்துக்கு முதல் வருகை .அருமையாக எழுதுகிறீர்கள் .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. //
    அலை வந்து பலமுறை சொல்லியும்
    காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
    கடலோரத்துக் கரை!//

    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  9. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  10. நிஜம்மாவே மனித காதல் இல்லைதான்

    பதிலளிநீக்கு
  11. தனித்தனி முத்துகள்-கவிதை
    இனித்திடும் வித்துக்கள்
    கனிதரும் நற்சுவை-தரும்
    காதலின் சொற்சுவை
    பனிதரும் குளுமை-வந்த
    பதங்களும் எளிமை
    நனிவர வேண்டும்-நீர்
    நலமுற வாழயாண்டும்

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி நண்டு
    கருத்துரைக்கு நன்றி எம்ஆர்
    வருகைக்கு நன்றி சதீஷ்

    பதிலளிநீக்கு
  13. நன்றி பிரேம்
    மகிழ்ச்சி சரவணன்
    நன்றி இரமணி ஐயா

    பதிலளிநீக்கு
  14. நன்றி இரத்தினவேல் ஐயா
    நன்றி கோபிராஜ்
    நன்றி காந்தி
    நன்றி சூர்யஜீவா
    நன்றி சசி
    நன்றி மாயஉலகம்

    பதிலளிநீக்கு
  15. நன்றி பிரகாஷ்
    நன்றி இரமேஷ்
    மகிழ்ச்சி புலவரே..

    பதிலளிநீக்கு
  16. கவிதை மிக மிக அருமை நண்பரே...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதத்தில் அசத்தல்தான். அதிலும் கவிதைக் காதலில் உள்ள நயமும், மனிதக் காதலில் உள்ள நையாண்டியும் ரசிக்கவைக்கின்றன.

    பதிலளிநீக்கு
  18. அசத்தலான காதல் கவிதைகள் படித்தேன் ரசித்தேன்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. அனைத்தும் அருமை ஆனாலும் மனிதக் காதல் அணிதையும் மிஞ்சிவிட்டது!!

    பதிலளிநீக்கு
  20. அலை வந்து பலமுறை சொல்லியும்
    காதலை ஏற்றுக்கொள்வதே இல்லை
    கடலோரத்துக் கரை!

    ஆஹா என்ன ஒரு கற்பனை

    பதிலளிநீக்கு
  21. முனைவரின் கவிதை முத்தாய்ப்பு..! கற்பனைக்கோ இல்லை எல்லை..! வாழ்த்துக்கள் ஐயா..!

    பதிலளிநீக்கு
  22. நன்றி இராஜா
    நன்றி சத்ரியன்
    மகிழ்ச்சி கீதா
    நன்றி கவியழகன்
    நன்றி குடிமகன்
    மகிழ்ச்சி தங்கம் பழனி

    பதிலளிநீக்கு
  23. பணம் ஏனோ உண்டியலைத்தான்
    திருமணம் செய்துகொள்கிறது! /// அவ்வ்வ்வ்!

    பதிலளிநீக்கு