வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

இந்த மாணவர்களைப் பார்த்து அழுவதா? சிரிப்பதா?


    தேர்வறையில் சில மாணவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். படித்தவர்கள் நிமிர்ந்துகூடப் பார்க்காமல் எழுதிக்கொண்டிருப்பார்கள். படிக்காதவர்களும் எழுதிக்கொண்டிருப்பார்கள். அருகே சென்று பார்த்தால் தான் படித்தவர் யார்?படிக்காதவர் யார்?என்று தெரியும்.

    படிக்காத சில மாணவர்கள்.....
  1. கதை கதையாக எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  2. எழுதியதையே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  3. வினாக்களையே பதிலாக எழுதிக்கொண்டிருப்பார்கள்
  4. நுழைவுச்சீட்டில் உள்ள அறிவுரைகளைப் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  5. வினாக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தனக்கு என்னென்ன நினைவிருக்கிறதோ அதையெல்லாம் எழுதிக்கொண்டிருப்பார்கள்.
  6. அருகே இருக்கும் மாணவன் வேறு தேர்வு எழுதிக்கொண்டிருப்பான். அதைக்கூடப் பார்த்து எழுதுவார்கள்.

  7. இவர்களின் நிலையைப் பார்த்தால் ஒரு கிராமிக்கதை தான் நினைவுக்கு வரும்
    இக்கதையில் வரும் மருகனுக்கு எழுதப்படிக்கவே தெரியாது. அந்தக் கிராமத்தில் யாரும் பள்ளிக்கூடப்பக்கமே சென்றதில்லை. இந்த மருமகன் மட்டும் ஒருநாள் பள்ளி சென்றிருந்தார் அதனால் இவரை “நாலெழுத்துப் படித்தவர்“ என்று ஊர்மக்கள் போற்றிவந்தனர். இவருக்கு வந்த சோதனையைப் பார்க்கலாம் வாங்க..


          படிப்பறிவில்லாத கிராமம். அங்கு ஒருவர் திருமணமாகி மருமகனாகச் சென்றார். ஊருக்குள் படித்தவர் இவர் ஒருவர்தான் என்பதால் மக்கள் இவருக்கு  அளவுக்கு அதிகமாகவே மதிப்பளி்ததார்கள்.

    ஒருநாள் ஊரிலிருந்து கடிதம் ஒன்று வந்தது. நம்ம மருமகன்தான் படித்தவராச்சே! என்று வரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள்.

    இவரும் கடிதத்தை வாங்கி நீண்டநேரம் பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென என்ன நினைத்தாரோ அவர் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

    வீட்டோடு பதறித்தான் போனார்கள் ஏதோ துக்கமான செய்திதான் கடிதத்தில் வந்திருக்கிறது என்று.

    “சும்மா சொல்லுங்க மருமகனே.. கடிதத்தில் என்னதான் வந்திருக்கிறது?“
    என்று கண்ணீர் மல்கக் கேட்டார்கள்.

    அவர்களின் தேற்றுதலும்,கண்ணீரும் மருகனுக்கு மேலும் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது.

    இவர்களின் ஆரவாரத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் இவர்களின் வீட்டில் கூடிவிட்டார்கள். மருமகன் குடும்பத்தோடு அழுவதையும், கையில் கடிதம் இருப்பதையும் பார்த்து வந்தவர்களும் பெருங்கூப்பாடு போட்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    மருகனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

    இவரும் என்னதான் செய்வார் பாவம்!

    இவரும் ஒருகாலத்தில் பள்ளி சென்றவர் தான் அதுவும் ஒரே ஒருநாள்தான் சென்றார். அவருக்குப் படிப்புவரவில்லை என்று அதற்குமேல் பள்ளிக்கே செல்லவில்லை. இருந்தாலும் நாலெழுத்துப் படித்தவர் என்பதால் இவருக்கு இவ்வளவு மரியாதை கொடுத்தார்கள் ஊர்மக்கள்.

    இப்படியொரு சூழல் வரும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.
    சரி சமாளிப்போம் என்று...

    கடிதத்தை பார்த்தார்.. ஒரு எழுத்துக்கூடவா நமக்குத் தெரியாமல் போய்விடும். அவர் பள்ளி சென்றபோது ஆசிரியர் எழுத்துக்களைக் கரும்பலகையில் எழுதி நடத்திக் கொண்டிருந்தார். அதில் “மா“ என்ற எழுத்து மட்டும் தான் இவருக்கு இந்தச்சூழலில் நினைவுக்கு வந்தது. சரி அந்த மா வாவது எங்காவது கடிதத்தில் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தார். கண்டேபிடித்துவிட்டார்..

    ஆம் அன்று ஆசிரியர் சொல்லித்தந்த அதே மா தான். இருந்தாலும் அவர் கரும்பலகையில் எழுதிக்காட்டியபோது மா பெரிய எழுத்தாக இருந்ததே. கடிதத்தில் இப்போது நாம் பார்க்கும் மா சிறிய எழுத்தாக உள்ளதே என்று இவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.

    இருந்தாலும் என்ன! தான் படித்ததைச் சொல்லியாகவேண்டுமே.
    மருமகன் இப்படிச் சொன்னார்...

    சின்ன மா இருக்கு,பெரியமா இல்லை. என்று..

    இது போதாதா கிராமத்துவாசிகளுக்கு. ஒப்பாரிவைத்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    என்ன?சின்னாம்மா இருக்காங்க..
    பெரியம்மா இல்லையா..?
    பெரியம்மா போயிட்டாங்களா..
    ஆத்தா போயிட்டியா...
    என்று எல்லோரும் சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டார்கள்.

    (இந்தக் கதை நகைச்சுவைக்காக மட்டுமல்ல நம் நாட்டுக் கல்விநிலைகுறித்து மதிப்பீடு செய்துகொள்வதற்காகவும் தான்)

    தொடர்புடைய இடுகைகள்

17 கருத்துகள்:

  1. சின்ன மா, பெரிய மா... நகைச்சுவையாக இருந்தாலும், வருந்தத் தக்க விஷயம்.....

    பதிலளிநீக்கு
  2. ரசித்துப் படித்தேன் சார்.. நன்றி..வாழ்த்துக்கள் ! (த.ம. 2)

    பதிலளிநீக்கு
  3. நம் நாட்டு கல்விமுறையின் வீச்சின் எல்லையை அழகாக பதிவுசெய்தது அருமை!

    பதிலளிநீக்கு
  4. நீங்க தென்கச்சிக்கு போட்டியா வந்துருவீங்க போலிருக்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்புக்கு நன்றி நண்பா..

      தென்கச்சி-கடல்
      நான் சிறு துளி.

      நீக்கு
  5. புன்னகையை வரவழைக்கும் நகைச்சுவை கதை, உடன் படிப்பினையையும் சொல்கிறது

    பதிலளிநீக்கு
  6. சிந்திக்க வைத்த சிரிப்பு! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. vanakkam thiru munaivar ira. gunaseelan avargale thangaludaiya mozhippattru ennai viyakka vaikkindra thodarattum thangaludaiya thamizhpani,
    enakku thamizhil irukkum moondru matrum irandu ezhuththukkalaana naa,la,evvaru uchcharippadhu enakku theriyavillai vilakkam aliththaal magizhchiyadaiven
    nandri
    ennudaiya minnanjal mugavari: surendranath1973@gmail.com

    பதிலளிநீக்கு