வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 13 மார்ச், 2017

விடுதலை வேட்கை என்னும் விதை!

ஆறு ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றவர்!
சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றவர்!
3 முறை தமிழக முதல்வராக இருந்தவர்!
பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்!
4 முறை எம்.பியாகவும், 12 முறை தமிழக காங்கிரசின் தலைவராகவும்  
5 முறை இந்தியக் காங்கிரசின் தலைவராகவும் இருந்தவர்!
1200 பள்ளிகளைத் திறந்தவர்! 9 அணைகளைக் கட்டியவர்
திருமணம் செய்துகொள்ளாமல் நாட்டுநலனே பெரிதென வாழ்ந்தவர்!
சுதந்திரப் போரில் 8 ஆண்டுகளை சிறையில் கழித்தவர்!
கல்வி, தொழில், விவசாயம் எனப் பல நிலைகளில் தமிழகத்தை ஏற்றம் காணச் செய்தவர்!
மூத்த தலைவர்கள், பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காகக் கட்சிப்பணிகளில் ஈடுபடவேண்டும் எனக்கூறித் தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்.
தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர், கருப்பு காந்தி என்றெல்லாம் போற்றப்பட்டவர்!
ஆம் அவர்தான் காமராசர்!

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தவர், அவருக்காக அவர் சேர்த்து வைத்த சொத்து சில கதர் வேட்டிகள், சட்டைகள், புத்தகங்கள் மற்றும் 150 ரூபாய் மட்டுமே.
சுதந்திரத் தீ பற்றி எறிந்த காலம்! டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் சொற்பொழிவுகள் இவர் மனதில் விடுதலை வேட்கை என்னும் விதையாக விழுந்தன என்றால், 15 வயதில் இவர் கேள்விப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை அந்த விதை வளரக் காரணமாக அமைந்தது.  அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று இவர் காங்கிரசுக் கட்சியில் இணைந்தது இவர் வாழ்வில் மட்டுமல்ல தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியல் வாழ்வுக்கே திருப்புமுனையாக அமைந்தது.

4 கருத்துகள்: