வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 6 மார்ச், 2017

தமிழ்த்தாத்தா வாழ்வின் திருப்புமுனை!


3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும்
சேகரித்தவர்!
90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதிப்பித்தவர்!
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர்! சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு என இவரது பதிப்புகளுள் குறிப்பித்தக்கன!
தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர்!
என பல புகழுக்கும் சொந்தக்காரர் உ.வே.சா அவர்கள்.
உ.வே.சா அவர்களுக்கு முதலில் தமிழ் கற்பித்தவர் இவரின் தந்தைதான். இருந்தாலும் உ.வே.சா. விற்குத் தமிழில் சுவையுண்டாக்கித் தமிழ் விதைவிதைத்த முதற் குரு அரியலூர் சடகோப ஐயங்கார் இவரே உ.வே.சா வாழ்வின் திருப்புமுனை என்றால் இவரை சங்கீத வித்வானாக்கவேண்டும் என ஆசைப்பட்ட உ.வே.சா அவர்களின் தந்தை தம் மகனின் தமிழ்ப்பசியைக் கண்டு ஊர் ஊராகச் சென்று தம் மகன் தமிழில் நுட்பமுடையவராக தன் மகனின் கனவுக்குத் துணை நின்றது இன்னொரு திருப்புமுனை எனலாம்.
வடமொழியும், ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்திய காலத்தில்
 மது தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ் உவேசா தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரியபயனில்லை,  ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் மூலம் உதவி செய்வதாகவும் சொன்னபோது உ.வே.சா தமக்குக் கோபம் வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

உ.வே.சா என்னும் தமிழ்த்தாத்தா தமிழுக்குப் பதிலாக வடமொழியையோ, ஆங்கிலத்தையோ படித்து தமிழ் மீது பற்றில்லாதவராக இருந்திருந்தாலோ, சங்கீத வித்வானாகியிருந்தாலே, அவரது தந்தை தன் கனவுக்காக நீ சங்கீதத்துறையில் தான் சாதிக்கவேண்டும் என கட்டாயப்படுத்தியிருந்தாலோ இன்று நாம் கொண்டாடும் பல தமிழ் இலக்கியங்கள் நம் பார்வைக்குக் கிடைக்காமலேயே போயிருக்கும்.

4 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா
    மகத்தான மனிதன் பற்றி அற்புதமாக சொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தமிழுக்குச் சிறப்புச் சேர்த்த
    அறிஞர் பக்கத்தைப் படித்தேன்.

    பதிலளிநீக்கு