வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 9 மார்ச், 2017

சித்தார்த்தரைப் புத்தராக்கிய காட்சிகள்!

ஆசையே துன்பத்துக்குக் காரணம்!
அறியாமையும்,
சாதிப்பிரிவுகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்!
மனிதவாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது!
அத்துன்பத்துக்குக் காரணம் தன்னலமும் ஆசையும்!
மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கமுடியும்!
மனிதன் தன்னலம்,ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க 
எட்டுவகை பாதை உண்டு
நேர்மையான கருத்து
நேர்மையான எண்ணம்
நேர்மையான  பேச்சு
நேர்மையான செயல்
நேர்மையான வாழ்க்கை
நேர்மையான முயற்சி
நேர்மையான  சித்தம்
நேர்மையான தியானம்
எனப்பாதைகளை வகுத்து,
புத்திக்கு முதலிடம்கொடு
தர்மம் செய்
சங்கம் சேர்க  
என்று அறிவுறுத்திய புத்தர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது, நான்கு காட்சிகள்.
      1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்,
2. ஒரு நோயாளி,
3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்,
4. நாலாவதாக ஒரு துறவி
இந்த நான்குகாட்சிகளும் சித்தார்த்தரைப் புத்தராக்கியது. இவை போல பல ஆயிரம் காட்சிகளைப் பார்க்கும் நாம் இன்னும் சராசரி மனிதராகவே இருக்கக் காரணம்.

எல்லாத் தவறுகளையும் நாமே செய்யவேண்டும் என நினைக்கிறோம்!
பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்கும் நுட்பத்தை நாம் அறிவதில்லை என்பதே எனது புரிதல்.



3 கருத்துகள்:

  1. முத்தாய்ப்பாகச் சொன்னவிதம் அருமை
    சுருக்கமாக எனினும் அருமையாக
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    சொல்லிய கருத்து உண்மைதான் ஆசைதான் காரணம்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு