வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடி


திங்கள், 4 ஆகஸ்ட், 2025

உழைப்பு - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 



உழைப்பே உயர்வு தரும், உழைக்காத காசு நிலைக்காது, என்றெல்லாம் அனுபவமொழிகள் உண்டு.

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று பாடல் உண்டு.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியும் உழைத்துவாழ் என்றே அறிவுறுத்துகிறது.

அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான் என்றார் கதே,

உழைப்பை இருவகைப்படுத்தலாம்..

அறிவு உழைப்பு உடல் உழைப்பு

அறிவு உழைப்பாளர்களுக்கே மதிப்பு அதிகம்

உடல் உழைப்பாளர்களுக்கு மதிப்புக் குறைவு

பலர் ஏன் உழைக்கிறோம்எதற்காக உழைக்கிறோம்எப்படி உழைக்கிறோம்?

என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.