உழைப்பே உயர்வு தரும், உழைக்காத காசு நிலைக்காது, என்றெல்லாம் அனுபவமொழிகள்
உண்டு.
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே என்று
பாடல் உண்டு.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியும் உழைத்துவாழ் என்றே அறிவுறுத்துகிறது.
அடிமையைப் போல உழைப்பவன் அரசனைப் போல உண்பான் என்றார் கதே,
உழைப்பை இருவகைப்படுத்தலாம்..
அறிவு உழைப்பு - உடல் உழைப்பு
அறிவு உழைப்பாளர்களுக்கே மதிப்பு அதிகம்
உடல் உழைப்பாளர்களுக்கு மதிப்புக் குறைவு
பலர் ஏன் உழைக்கிறோம்? எதற்காக
உழைக்கிறோம்? எப்படி உழைக்கிறோம்?
என்ற சிந்தனையின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.