வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 30 ஏப்ரல், 2009

சங்க இலக்கியத்தில் காதல் மெய்பாடுகள்

சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள அகம் சார்ந்த உணர்வுகளைசங்க இலக்கியத்தில் காதல் மெய்பாடுகள்-டாக்டர்.மு.பொன்னுசாமி இந்நூல் விரிவாக விளக்குகிறது. மெய்பாடு என்பது உடலில் தோன்றும் உணர்வு வெளிப்பாடாகும். இதனை வெளிப்படுத்துவது, புரிந்துகொள்வது என்னும் இருநிலைகளிலும் சங்க இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன.
உளவியல் என்றால் இன்று யாவரும் அறிவர்.ஆனால் இரண்டாயித்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு உளவியல் குறித்த சிந்தனை எப்படி இருந்தது என நாம் அறிந்துகொள்ள விரும்பினால் சங்க இலக்கியங்களைப் படித்தால் போதும்.சங்க இலக்கியங்களில் பல்வேறு மெய்பாடுகளும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தொகுத்து அகம் சார்ந்த மெய்பாடுகளை மட்டும் விரிவாக ஆய்ந்து கூறும் சிறந்த ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது.

உள்ளடக்கம்
பகுதி- ஒன்றுஅ.மெய்பாடு விளக்கம்
ஆ.வடமொழி இரச சிந்தனையாளர்களின் கருத்து
இ.உளவியலாளரின் கோட்பாடுகள்
ஈ.திறனாய்வாளர்களின் கருத்து

பகுதி- இரண்டு
அ.சங்க இலக்கியத்தில் காதல் மெய்பாடுகள்.
ஆ.களவுக் கால மெய்பாடுகள்.
இ.பிரிவுக்கால மெய்பாடுகள்.
ஈ.வரைவுக்கு வழிவகுக்கும் மெய்பாடுகள்.
உ.கற்புக்கு வழி வகுக்கும் மெய்பாடுகள்.

என அமைந்துள்ளது.

நூல் கிடைக்குமிடம்
சித்ரா நிலையம்
7/40 கிழக்குச் செட்டித் தெரு
பரங்கி மலை சென்னை
நூல் வெளியான ஆண்டு-1990.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக