வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 31 மார்ச், 2009

மனதில் நின்ற நினைவுகள்




தமிழரின் பெயர்கள் ஒரு காலத்தில் இனம்,மொழி,நாடு எனப் பல்வேறு கூறுகளையும் காட்டுவதாக இருந்தன. இன்றைய நிலையில் தமிழர்களின் பெயர்களைக் காணும் போது தமிழன் என்பதற்கான எவ்வித அடையாளமும் அதில் இருப்பதில்லை.தமிழ் என்னும் சொல்லையே ஆங்கிலத்தில்(Tamil)டமில் என்று எழுதும் அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.பாவம் தமிழ்(Thamizh)என ஆங்கிலத்தில் கூட எழுத இயலாத வெட்கக்கேடான நிலைதான் இன்றும் உள்ளது. ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு உயிரையும்,உடலையும் வளர்க்கும் தமிழனின் நிலையை எண்ணி மனம் வாடுகிறது. தமிழுணர்வாளர்கள் தமிழனின் இந்த அவல நிலையை எண்ணி காலந்தோறும் வருந்தி வந்திருக்கிறார்கள்.
தமிழர் தலைவர். ஆதித்தனார் இந்நிலையைக் கூறும் போது,
நான்கு தடவை உலகத்தைச் சுற்றியிருக்கிறேன்.தமிழ்நாட்டில் உள்ளதைப் போல ks.கண்ணன்,pv.முத்து என்று இரண்டு மொழிகளில் கையெழுத்துப் போடுகிறவன் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.” என மனம் வருந்திக் கூறியுள்ளார்.
தமிழனின் கோமாளித்தனத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆதித்தனார் அவர்களின் மனக்குமுறல் இன்றும் என் நினைவில் வந்துபோகிறது.

2 கருத்துகள்:

  1. வணக்கம் குணா,
    உண்மைதான் இன்று தமிழின் நிலை தமிழனின் நிலை .....எண்ணதக்க ஒன்றாகவுள்ளது.
    அன்புடன்
    கல்பனாசேக்கிழார்
    வாழ்க தமிழ்

    பதிலளிநீக்கு