வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 30 செப்டம்பர், 2010

கண் (கலீல் ஜிப்ரான்)



ஒரு நாள் கண் சொன்னது….
நான் இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் நீலப்பனித்திரை மூடிய மலையினைக் காண்கிறேன். அது அழகாக இருக்கிறதன்றோ!

காது கேட்டது…

சிறிது நேரம் கூர்ந்து கவனித்தபின் சொன்னது….
ஆனால் இங்கே எங்கே இருக்கிறது மலை?
யாதொரு மலையும் இல்லையே?
நான் எதுவும் கேட்கவில்லையே?

பிறகு கை பேசியது…
நான் அதை உணரவோ தொடவோ முயற்சித்தும் என் முயற்சி வீணாகிவிட்டதே! என்னால் எந்த மலையையும் காணமுடியவில்லையே!

இப்போது மூக்கு சொன்னது….
இங்கே எந்த மலையும் இல்லை. நான் அதை உணரவோ,நுகரவோ மோப்பம் பிடிக்கவோ முடியவி்ல்லையே?

பிறகு கண் மறு பக்கம் திரும்பிக்கொண்டது. மற்ற புலன்கள் யாவும் தங்களுக்குள் கூடி கண்ணினுடைய தவறான நம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டன.

இந்தக் கண்ணுக்கு ஏதோ ஆகிவி்ட்டது…
ஏதோ ஒன்று இருக்கிறது என்று.


கதை உணர்த்தும் நீதி….



○ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
○ அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
○ நான்கு முட்டாளுக்கிடையே ஒரு புத்திசாலி வாழமுடியாது.

இன்னும் திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது சிந்தனைகளின் திறவுகோலாக இக்கதை இருக்கிறது.

8 கருத்துகள்:

  1. //○ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நம்பிக்கையிருக்கிறது.
    ○ அவரவர் அறிவுக்கு எட்டியவரை மட்டுமே அவரவரால் சிந்திக்கமுடிகிறது.
    ○ நான்கு முட்டாளுக்கிடையே ஒரு புத்திசாலி வாழமுடியாது.
    //

    கதை உணர்த்தும் நீதி முற்றிலும் உண்மை.
    அருமையான கதை நண்பரே..!

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவுக்கு நன்றி.
    தமிழில் இத்தகைய பதிவுகளை பார்க்கும் பொழுது உள்ளம் பூரிப்படைகின்றது.

    பதிலளிநீக்கு
  3. கதை உணர்த்தும் ஆன்மீக நீதி:

    உண்மையை (கடவுளை) உணர்ந்த ஞானி அதை உணராதவர்களுக்கு விளக்கி சொல்லுதல் எளிதல்ல்.

    பதிலளிநீக்கு
  4. கதையும் நீதியும் மனதில் படிகிறது குணா!

    பதிலளிநீக்கு
  5. நன்றி புதிய மனிதா
    நன்றி குமார்
    நன்றி இரப்பேல்
    நன்றி சைவ கொத்துபுரோட்டா
    நன்றி சசி
    நன்றி சபரி
    நன்றி ஹேமா

    பதிலளிநீக்கு