வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 18 ஜூன், 2020

ஊடகக்களங்களும் கருத்தாடல்களும் - இணையவழிப் பயிலரங்க அழைப்பிதழ்




அன்புடையீர் வணக்கம்!
பூ.சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை ஏற்பாடு செய்துள்ள
இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் 22-6-2020 முதல்
24-6-2020 முடிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.
தலைப்பு: “ஊடகக்களங்களும் கருத்தாடல்களும்”
பயிலரங்கம் நாள்தோறும் காலை 10 மணிமுதல் 11 மணிவரை Google meet செயலி
வழியாக நடைபெறும். மேலும் YOU TUBE வாயிலாகவும் நேரலையாகக் கண்டு
பயிற்சி பெறலாம். இப்பயிலரங்கத்தில் பேராசிரியர் பெருமக்கள்
கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம். பதிவு செய்யக் கடைசி நாள் 21-6-2020.
பதிவுக்கட்டணம் கிடையாது.
ஒவ்வொரு நாளும் அமர்வின் போது பின்னூட்டப்படிவம் வழங்கப்படும். மூன்று நாட்களும் பங்கேற்று, பயிலரங்கத்திற்கு வலுசேர்க்குமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம். மூன்று நாட்களும் பங்குபெற்றுப் பின்னூட்டங்களைப் பூர்த்தி செய்து
அனுப்புபவர்களுக்கு மின்சான்றிதழ் மின்னஞ்சல்வழியாக அனுப்பப்படும். கூட்டத்திற்கான கூகுள் மீட் அழைப்புக் குறியீடு 21.06.2020 அன்று தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு அனுப்புவோம். மிக்க
நன்றி.
பதிவு செய்வதற்கான இணைப்பு -https://forms.gle/kFiAbR9Lv1SEpaaQ7
You tube channel. gunathamizh
பயிலரங்கத்தலைவர்
முனைவர் சோ. பத்மாவதி
தமிழ்த்துறைத் தலைவர்.
தொடர்புக்கு
ஒருங்கிணைப்பாளர்
முனைவர் இரா. செல்வி
இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை
9488202797
r.selvi1967@gmail. Com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக