வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 23 செப்டம்பர், 2010

ஒரு துளி கண்ணீர்.


ஒரு துளி கண்ணீர்.


² உலகில் மிகப்பெரிய செல்வம்……………….?
நமக்காக ஒருவர் சிந்தும் கண்ணீர்!
அடுத்தவருக்காக நாம் சிந்தும் கண்ணீர்!

உண்மையான அன்பிருந்தால் மட்டுமே இந்தச் செல்வம் கிடைக்கும்.



² பள்ளிக்கூடம்.


போகவேண்டிய நாளில் போக மனமில்லை!
போகமுடியாத நாளில் போகத்துடிக்கிறது மனம்!

பள்ளிக்கூடத்துக்கு!


² ஒலி அளவு


பேச்சின் ஒலி அளவை அதிகரிப்பதைவிட,
பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.

“நாணயங்கள் தான் ஓசை எழுப்பிக் கொண்டேயிருக்கும்!
ரூபாய் நோட்டுகள் அதிகம் ஓசை எழுப்புவதில்லை!!!


² கடவுள்

இன்று பசியால் வாடும் மக்களுக்கு
உணவு கொடுக்காத கடவுள்…

நாளை சொர்க்கமே கொடுப்பதானாலும்….

அப்படியொரு கடவுள் தேவையில்லை!!!

13 கருத்துகள்:

  1. பேச்சின் ஆழத்தை அதிகப்படுத்தினால் மதிப்பு உயரும்.

    நல்ல வரி
    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

    பதிலளிநீக்கு
  2. கடவுளும் கண்ணீரும் அசத்தல் குணா...புது வகை பதிவு உங்க பதிவில் ரொம்ப அழகாயிருக்கு..

    பதிலளிநீக்கு
  3. சகலருக்குமானதாக நம் கண்ணீரும் புன்னகையும் இருப்பதுவே பெரும்பேறு!

    பதிலளிநீக்கு
  4. @தமிழரசி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.

    பதிலளிநீக்கு
  5. //நாளை சொர்க்கமே கொடுப்பதானாலும்….
    அப்படியொரு கடவுள் தேவையில்லை!!//

    நானும் ஆமோதிக்கிறேன் நண்பா அனைத்தும் அருமை . குறிப்பாக அந்த கண்ணீர் படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  6. குணா....ஒலி அளவின் இரகசியம் உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  7. படைப்பு நன்றாக இருக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு