வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 29 ஜூலை, 2021

12 நாட்கள் - 12 சொற்பொழிவுகள் - மக்கள் சிந்தனைப் பேரவை

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.411

செல்வங்களுள் உயர்ந்த செல்வம் கேள்விச் செல்வமே


கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.414

ஊன்றுகோல் போல துன்பத்தில்உதவுவது கேள்வியறிவே


எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.416

எவ்வளவு நல்லது கேட்கிறோமோ அவ்வளவு நல்லது விளையும்


கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.418

செவியின் கேட்புத்திறன்ஓசையல்லகேள்வியறிவே!


நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய

வாயினராதல் அரிது.419

நல்ல கேள்வியறிவுடைரேபணிவுடன் பேசுவா் 


செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என். - 420

செவியின் சுவையறியாமல் வாழ்வதும் வாழ்க்கையா?


ஈரோடு புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக கலந்துகொண்ட நினைவுகள் மனதில் நிழலாடுகின்றன. 

பெருந்தொற்றின் காரணமாக புத்தகத் திருவிழா நடைபெறாவிட்டாலும் இணையவழி சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெறுவது வரவேற்புக்குரியது. 

மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் திரு ஸ்டாலின் குணசேகரன் ஐயா அவர்களுக்கும் அமைப்பின் செயல் வீரர்களுக்கும் வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


மக்கள் சிந்தனைப் பேரவை வலைக்காட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக